சஞ்சய் காந்தி தேசியப் பூங்காசஞ்சய் காந்தி தேசியப்பூங்கா (Sanjay Gandhi National Park) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் ,மும்பை [1] க்கு அருகில் 87 கி.மீ. 2 (34 சதுர மைல்) பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அமைந்துள்ளது. வரலாறு:இந்தப் பூங்கா 1983ல் மும்பை மாநிலத்தில் உள்ள தாணே இடத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 86.96 ச.கி.மீ ஆகும். பூங்காவுக்கு அண்மையான நகரம் மோரிவில் 3 கி.மீ. தூரத்தில் தான் இருக்கிறது. இந்த நகரமே இப்பூங்காவின் ரயில் நிலையமாகும். பூங்காவின் அமைப்பு:காட்டின் பெரும்பகுதி புன்செய் வகையானது. கன்ஹேரிகுகைகளை நெருங்கும் பகுதியில் ஆங்காங்கே ஒருசில என்றும்-பசுமை மற்றும் அரைகுறை என்றும்-பசுமைக் காடுகள் உள்ளன. தாவர இனங்கள் மாங்க்ரோவ், ஜாம்பல், தேக்கு ஆகியன. பூங்காவில் சுமார் 1000 வகையான பூக்கும் தாவரங்கள் இருக்கின்றன. வன விலங்குகள்:பூங்காவின் பிராணிகளில் சிறுத்தை, காட்டுப்பூனை, கீரி, நாற்கொம்புமான், சாம்பர், எலிமான், வராகம், ல்ங்கூர், குரங்கு, மகரம், முதலை முதல்யன அடங்கும். பறவைகள்:ஹான்பில்ஸ், புல்புல்ஸ், சூரியன் பறவைகள், மயில் மற்றும் மரம்கொத்தி. அரசவால் ஈப்பிடிப்பான் என்னும் வலசைப் பறவையும் இங்கு வரும். மீன்கொத்திகள், மைனாக்கள், ரெட்டைவாள் குருவி, உழவாரக்குருவி, நீள்சிறகுடை கடற்பறவைகள், வெண்குருகு, நாரைகள் போன்றவை இங்கு காணலாம். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia