சின்னாளப்பட்டி சுங்குடி சேலைசின்னாளப்பட்டி சுங்குடி சேலை என்பது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் தயாரிக்கப்படும் சேலை ரகமாகும்.[1] பிரபலமாக சின்னல பட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் சுங்குடி புடவைகள் மரபார்ந்த வழியில் நெய்யப்படுகின்றன. தற்பொழுது, சேலை பயன்பாடு குறைந்திருப்பதால், சின்னாளப்பட்டி நெசவாளர்கள் சுங்குடி சுடிதார்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வகைகள்
என பல்வேறு வகைகளில் சுங்குடி சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிப்புசின்னாளப்பட்டி நெசவாளர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வெள்ளை நிற சேலைகளை வரவழைக்கின்றனர். இந்த வெள்ளை நிற சேலைகளில் மெழுகை நன்கு காய்ச்சி நூற்றுக்கும் மேற்பட்ட வித விதமான கட்டையச்சுகளைப் பயன்படுத்தி பல்வேறு வடிவங்களை அச்சடித்து தயார் செய்கின்றனர். பின்னர், மெழுகச்சு வேலை முடிந்து, பல்வேறு வடிவங்களைக் கொண்ட வண்ண வண்ணமான அச்சுக்களை பதிக்கின்றனர். இவ்வாறு அச்சடிக்கப்படும் சுங்குடி சேலைகளில், அச்சு வேலை முடிந்த பின்பு, சவ்வரிசியை கொண்டு நன்கு காய்ச்சிய கஞ்சியை சேலையில் முழுவதுமாக நனைத்து உலர வைக்கின்றனர். ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia