சின்னாளப்பட்டி
சின்னாளப்பட்டி (ஆங்கிலம்:Chinnalapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஓர் பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 26,227 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 4.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த சின்னாளப்பட்டி பேரூராட்சி, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சின்னாளப்பட்டி சுங்குடி சேலைகள் சின்னாளப்பட்டியில் நெய்யப்படுகின்றன. காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் வளாகம் இவ்வூரின் அருகாமையில் உள்ளது.[3] மக்கள் தொகை பரவல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,981 வீடுகளும், 26,285 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 87.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,032 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 964 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,523 மற்றும் 2 ஆகவுள்ளனர்.[4] ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia