தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம்பனைமரத் தொழிலாளர் நல வாரியம் என்பது பனைத் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கான நல வாரிய அமைப்பு ஆகும். இது தமிழக அரசினால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலார் நலவாரியங்களில் ஒன்று ஆகும். இதன் மூலம் பனை மரத் தொழிலாளர்களான அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓர் அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, தேவையான நலத் திட்ட உதவிகள் வழங்கி, அவர்களின் சமூக நலப்பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த நலவாரியம் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. பனைத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக திரு. எர்ணாவூர்.A.நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினராகும் முறைபனைத் தொழிலாளர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நல அலுவலரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும். பயன்கள்தொழிற் பயிற்சி
நலத்திட்ட உதவிகள்இந்த நலவாரிய உறுப்பினர்களுக்கு தமிழக அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
கோரிக்கைகள்
கள் இறக்க அனுமதிகள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை தமிழக அரசு தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. தமிழக அரசே கள் அல்லது புளிக்காத கள்ளை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. சாதகங்கள்
பாதகங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia