திருவெம்பாவைதிருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாகக் கொண்டுள்ளார்கள். [1] கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது. [2] நூல் அமைப்புதிருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிப்பது.[3] ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும் குறிப்பன.[4] திருவெம்பாவை பெயர்க் காரணம்மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது திருவெம்பாவை. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் திருவெம்பாவை என்றே வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. இந்த "ஏலோர் எம்பாவாய்" என்ற தொடர் பொருளற்றது என்றும், "பாவை போன்ற பெண்ணே நீ சிந்திப்பாய்" என்று பொருள் தருவதாகவும் இரு கருத்துகள் நிலவுகின்றன.[5] தத்துவம்சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி, பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும். பெண்கள் நோன்பு நோற்பதற்கு காலையில் செல்லும்போது தூங்கும் பெண்ணை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன், அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி, நீராடி, சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது. சிறப்புதாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை இவை மன்னர் முடிசூட்டலின்போது பாடப்படுகின்றன.[6] திருவெம்பாவைப் பாடல்களில் சிலஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிர் எழுந்தென்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
உள் நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
கோலமும் நம்மைஆட் கொண்டருளி கோதாட்டுஞ்
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
தானேவந் தெம்மைத் தலையளித் தாட்கொண்டருளும்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பேரரையர்க் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
போற் றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற் றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற் றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற் றியாம் உய்ய ஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia