பாண்டியர் செப்பேடுகள் என்பது பாண்டிய வேந்தர்கள் கொடுத்த நில தானங்களையும், தன் முன்னோர் நில தானங்களை ஆவணப்படுத்தவும் உருவாக்கப்பட்ட பட்டயங்களாகும். பாண்டியர் செப்பேடுகளில் இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கொடுக்கப்பட்ட ஏழு செப்புப்பட்டயங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைந்தன. இவை கிடைக்காமல் போயிருந்தால் களப்பிரர் ஆட்சியைத் தமிழ்நாட்டில் வேரறுத்த பாண்டியர் வேந்தன் கடுங்கோன் பற்றி வரலாறு அறியாமலேயே போயிருக்கும். இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்களின் காலங்களைக் கணிப்பதற்கும், முறைப்படுத்துபவதற்கும் வகையிலாமல் போயிருக்கும்.[1]
ஏழு முக்கியச்செப்பேடுகள்
முற்கால மற்றும் பிற்கால செப்பேடுகளில் ஏழு செப்பேடுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை,
சுந்தர பாண்டியன் மற்றும் அவன் இளையவன் வீர பாண்டியன்.
பாண்டியர்பற்றிய குறிப்புகள்
மேலுள்ள செப்பேடுகளில் தளவாய்புரம், சின்னமனூர், வேள்விக்குடி போன்ற செப்பேடுகளில் பாண்டிய வேந்தர்கள் செய்ததாகச் சில செயல்கள் குறிக்கப்படுகின்றன. அவை,
உலகம் எல்லாம் பேரூழியில் அழிந்தது. பாண்டிய வேந்தன் ஒருவன் மட்டும் உயிரோடு இருந்தான். மீண்டும் பிரம்மா பூவுலகை படைக்கும் போது அதைச் சுமக்கும் ஆதிசேசனுக்கு சுமை அதிகமானதால், பாண்டியனை புவியின் பாரத்தை தாங்குமாறு வேண்டினான். அதற்குப் பாண்டியன் இசைந்து சந்திர வம்சத்தில் மீண்டும் புதனாக (கிரகம்) தோன்றினான். அவன் வழியில் புரூரவசு என்ற மன்னன் வந்தான் என்று கூறுகின்றன. அதன்படி பின்வரும் பாண்டியர் வம்சம் விளக்கப்ப்டுகின்றது.
இன்னும் பல ஆண்டுகள் கழித்து மேற்கூறப்பட்ட வழியிலிருந்து தெளிவில் சந்திரனை மிஞ்சியும், ஒளியில் சூரியனை விஞ்சியும், ஞானத்தால் தேவர்களின் குருவான பிரகசுபதியை விஞ்சியும் பாண்டியர் குலம் பூவுலகில் தோன்றுகிறது.
பாற்கடலை பாண்டியர்கள் கடைந்தனர்
தேவாசுர யுத்தத்தில் தேவர்களின் சார்பில் போரிட்டு அசுரகணங்களை அழிக்கின்றனர்.
இந்திரன் தன் உலகத்துக்கு அழைக்க அங்கு சென்ற பாண்டியன் இந்திரன் ஆசனத்தில் அமர்ந்தான்.
இதனால் இந்திரன் வருணனை ஏவ வருணன் பாண்டிய நாட்டை ஊழியாக அழிக்க முயல கடலைத் தன் வேலெறிந்து அடக்குகிறான் ஒரு பாண்டியன்.
5 ஏடுகள், வட்டெழுத்து, இரண்டாம் ஐந்தாம் ஏடுகள் உடைந்து உள்ளன.
சிவகாசி, விருதுநகர் மாவட்டம்
மூலம்
பாண்டியர் செப்பேடுகள் பத்து. 40, பீட்டர்சு தெரு, சென்னை - 14: தமிழ் வரலாற்றுக்கழகம். 1967.{{cite book}}: CS1 maint: location (link)
உசாத்துணை
திருஞானசம்பந்த சுவாமிகள். "திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரத் திருப்பதிகங்கள் மூன்றாம் திருமுறை". tamilvu.org. pp. பக்கம் 140திலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள மூல நூலான பாண்டியர் செப்பேடுகள் பத்து என்னும் நூலில் எவ்வாறு பாண்டியரின் வரலாறு கணிக்கப்பட்டதென விரிவாக உள்ளது. Retrieved 04 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)