புதுநகரம் தொடருந்து நிலையம்
புதுநகரம் தொடருந்து நிலையம் (Pudunagaram railway station, நிலையக் குறியீடு: PDGM) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG-6 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[1] இந்த தொடருந்து நிலையம் பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது இந்திய மாநிலமான கேரளத்தில் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையான ஒரு கிளைப்பாதையாகும். வரலாறுபாலக்காடு சந்திப்பு மற்றும் பாலக்காடு நகரத்திற்கு இடையே இந்த பாதை முழுமையாக இயங்கி வந்தது.[2] இந்நிலையில் பாலக்காடு நகரம் மற்றும் பொள்ளாச்சி இடையேயான பாதையானது மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகலப் பாதையாக 2015 ஆம் ஆண்டு மாற்றபட்டது. 2 அக்டோபர் 2015 அன்று பாதுகாப்பு சோதனைகள் நிறைவு செய்யப்பட்டன.[3] அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆய்வுகள் 7 அக்டோபர் 2015 அன்று நிறைவடைந்தன.[3] 8 அக்டோபர் 2015 அன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் பயணிகள் தொடருந்து சேவைகளுக்காக இந்த பாதை அங்கீகரிக்கப்பட்டது.[4] தற்போது இங்கு இரண்டு தொடருந்துகள் நிறுத்தப்பட்டுகின்றன. அவை எர்ணாகுளம்-ராமேஸ்வரம் சிறப்பு கட்டண விரைவு வண்டி மற்றும் திருச்செந்தூர்-பாலக்காடு பயணிகள் வண்டி. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia