பொள்ளாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம்
பொள்ளாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் (Pollachi junction railway station, நிலையக் குறியீடு:POY) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் தென்னக இரயில்வே மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தின் கீழ் இயங்குகிறது. வரலாறுபொள்ளாச்சி சந்திப்பானது முதன்முதலில் 1850களில் தொடருந்து நிறுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது. 1900க்குப் பிறகு, இது பயணிகளுக்கான நிலையமாக பயன்படுத்தப்பட்டது. முதல் சேவை 1915இல் பொள்ளாச்சி முதல் போத்தனூர் வரை மீட்டர் கேஜ் இரயில் பாதையாக தொடங்கியது. பின்னர் 2008 ஆம் ஆண்டில், திண்டுக்கல் - போத்தனூர் பாதை மாற்றத்திற்காக நிலையம் மூடப்பட்டது.[1] நவம்பர் 25, 2014 அன்று, பொள்ளாச்சி - பழனி அகல இரயில் பாதையில், இரயில்வே பாதுகாப்பு ஆணையம், ஒரு வேக சோதனை மற்றும் ஆய்வை வெற்றிகரமாக முடித்தது. ஏழு ஆண்டுகள் கட்டுமானத்திற்குப் பிறகு, பொள்ளாச்சி சந்திப்பு - பழனி அகலப்பாதை, வணிக பயன்பாட்டிற்காக 9 சனவரி 2015 அன்று திறக்கப்பட்டது.[2] 1898 முதல் 2008 ஆம் ஆண்டில் மாற்றத்திற்காக மூடப்படும் வரை, பழைய மீட்டர் கேஜ் பாதையாக, 110 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தது. 6 அக்டோபர் 2015 அன்று, இரயில்வே பாதுகாப்பு ஆணையம் வெற்றிகரமாக பாலக்காடு டவுன் - பொள்ளாச்சி சந்திப்பு வரை அகல இரயில் பாதையில், வேக சோதனை மற்றும் ஆய்வை முடித்தது. இரயில்வே பாதுகாப்பு ஆணையம் செய்த சோதனை ஓட்டத்தில், சிறப்பு தொடருந்து ஆனது, 38 நிமிடங்களில் 54 கி.மீ தூரம் சென்றது. இந்த வழித்தடம் வணிக பயன்பாட்டிற்காக 16 நவம்பர் 2015 அன்று திறக்கப்பட்டது. 24 மார்ச் 2017 அன்று, போத்தனூர் - பொள்ளாச்சி அகல இரயில் பாதையில், இரயில்வே பாதுகாப்பு ஆணையம், ஒரு வேக சோதனை மற்றும் ஆய்வை வெற்றிகரமாக முடித்தது. வழித்தடங்கள்இந்நிலையத்திலிருந்து மூன்று வழித்தடங்கள் பிரிந்து செல்கின்றன:
திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6][7] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் பாலக்காடு கோட்டத்தில் பொள்ளாச்சி சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 6.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [8][9][10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia