மரைக்காயர்பட்டினம்
மரைக்காயர்பட்டினம் (ஆங்கிலம்:Maraikayarpattinam) இது இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும்[4]. கிராமத்தின் தெற்கே இந்திய பெருங்கடலும் வடக்கே வங்கால விரிகுடாவும் சூழ அமைந்துள்ளது. 1950 வரை இவ்வூர்வாசிகள் கடல் வணிகம் செய்துவந்தனர். இலங்கையில் கொழும்பு, சிலாபம், யாழ்ப்பாணம், திரிகோணமலை, புத்தளம், கல்முனை போன்ற துறைமுகங்கள் மற்றும் பர்மா-இன்றைய மியான்மரின் ரங்கூன், வங்காளதேசத்தின் டாக்கா, போன்ற துறைமுகங்கள் இவர்களின் காலடித்தடங்களையும் மரக்கலங்களையும் அதிகம் வரவேற்றவை. இதுபோக பாரசீகம் என அழைக்ககப்பட்ட ஈரான், அதையடுத்த ஈராக், குவைத், மேலும் எத்தியோப்பியா, எகிப்து நாடுகளின் துறைமுக நகரங்களையும் அவ்வப்போது அடைந்து வணிகத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியா கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே அங்கு காலடி பதித்தவர்கள் என்பது சுவையான செய்தியாகும். நியூசிலாந்து கடலில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட "முகைதீன் வக்காஸ் கப்பல் மணி" என்ற பெயர் பொறிக்கப்பட்ட நங்கூர மணியே இதற்கு சான்றாகும். மரம்+கலம்+ராயர் - மரத்தால் செய்யப்பட்ட கலம் (கப்பல்)-இன் உரிமையாளர் என்பதே மரக்கலராயர் என்பதாகும். இது மருவியே மரக்காயர் ஆனது. மரக்காயார்கள் மட்டுமே உள்ள ஊர் என்பதால் இப்பெயர் வந்திருக்கலாம். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia