முதலமட தொடருந்து நிலையம்
முதலமட தொடருந்து நிலையம் (நிலைய குறியீடு: MMDA, Muthalamada railway station) என்பது தென்னக இரயில்வே மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள ஒரு என். எஸ். ஜி -6 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[1] இந்த நிலையம் இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டம் முதலமட சிற்றூரில் அமைந்துள்ளது. இது பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடதில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது கேரள மாநிலத்தின் பாலக்காடு சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் தமிழ்நாட்டின் பொள்ளாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு கிளைப் பாதையில் அமைந்துள்ளது. வரலாறுபாலக்காடு சந்திப்பு மற்றும் பாலக்காடு நகரத்திற்கு இடையே இந்த பாதை முழுமையாக இயங்கி வந்தது.[2] இந்நிலையில் பாலக்காடு நகரம் மற்றும் பொள்ளாச்சி இடையேயான பாதையின் பிரிவானது மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகலப் பாதையாக 2015 ஆம் ஆண்டு மாற்றபட்டது. 2 அக்டோபர் 2015 அன்று பாதுகாப்பு சோதனைகள் நிறைவு செய்யப்பட்டன.[3] அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆய்வுகள் 7 அக்டோபர் 2015 அன்று நிறைவடைந்தன.[3] 8 அக்டோபர் 2015 அன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் பயணிகள் தொடருந்து சேவைகளுக்காக இந்த பாதை அங்கீகரிக்கப்பட்டது.[4] தொடருந்துகள்முதலமட தொடருந்து நிலையம் வழியாக தற்போது இயங்கிவரும் தொடருந்து சேவைகள் பின்வருமாறு:- அஞ்சல் / விரைவு வண்டிகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia