முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்![]() முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள்,[1] கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன்[2] போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழ நாட்டுப் படையெடுப்பும் ஒரு முக்கிய காரணம்.[3] ஆற்றிய போர்கள்
ஆற்றிய கோயில் அறப்பணிகள்சிதம்பரத்தில் ஆற்றிய பணிகள்சிதம்பரத்தில் தில்லையம்பதியில் உள்ள திருமால்,சிவன் கோயில்களிற்குத் துலாபார தானங்களை வழங்கினான். தில்லை நடராசப் பெருமானின் கோயில் கோபுரத்திற்குப் பொன்தகடு வேய்ந்து,அங்குள்ள நான்கு ராஜகோபுரங்களில் மேற்குக் கோபுரத்தினைக் கட்டினான் அக்கோபுரமும் சுந்தரபாண்டியன் கோபுரம் எனப் பெயர் பெற்றது. திருவரங்கத்தில் ஆற்றிய பணிகள்திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் திருவரங்கம் என அழைக்கப்படும். திருமாலை வணங்கிய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமானின் கோபுரத்தை வேய்ந்து அக்கோயிலிலேயே முடிசூடியும் கொண்டான்.கோயில் பணிகளிற்காக நிலங்களினைக் காணிக்கையாக அளித்து அக்கோயில் இறைவனுக்கு அணிகலன்கள் பலவனவற்றை அளித்தான்.இக்கோயிலில் வடமொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் இவனது பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.இவன் செய்த பணிகள் காரணமாக "கோயில் பொன் வேய்ந்த பொருள்" என்ற பட்டத்தினைப் பெற்றான்.இவனது படிமங்கள் பல பட்டப்பெயருடன் திருவரங்கத்திலும் பிற இடங்களிலும் அமைக்கப்பட்டன.திங்கள் தோறும் தனது பிறந்தநாளான மூலநாளில் விழா நடத்த ஏற்பாடு செய்யச்சொல்வானெனவும் சித்திரைத் திங்கள் மூலநாளில் திருவானைக்கா திருக்கோயிலில்,"சேரனை வென்றான்" என்ற பெயருடைய திருவிழாவொன்றை நடத்தி வைத்து மூன்று ஊர்களை நிவந்தமாக்கினான் என்பதும் வரலாறு. காஞ்சிபுரத்தில் ஆற்றிய பணிகள்தெலுங்குச் சோழனை வென்று காஞ்சி நகரைக் கைப்பற்றிய காரணத்தினால் காஞ்சீபுர வராதீசுவரன்,காஞ்சீபுரங்கொண்டான் போன்ற பட்டங்களினையும் எல்லாந் தலையனானான் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றான். காஞ்சியிலும் வீராபிடேகம் செய்தான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். கச்சீசுவரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் இரண்டிற்கும் திருப்பணிகள் செய்தான்.காஞ்சீபுரம் திருப்புட்குழித் திருமால் கோயிலில் இவனைப் பற்றிய வாழ்த்துப்பா உள்ளது. அப்பாடலில்
என இவனைப் பாடப்பட்டுள்ளது.தமிழ்பற்றும்,வட மொழி அறிவும் உடைய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனது கல்வெட்டுக்கள் தமிழகம் முழுவதினிலும் காணலாம். மறைவுஇவன் தன் வழிவந்தவனான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பவனிடம் 1267ல் ஆட்சியை ஒப்படைத்து விட்டு கி.பி. 1271 ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தான் எனபது வரலாறு.[9] நாணயவியல்இவனது ஆட்சியில் 7 விதமான பெயர்களுடன் காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை,
இவற்றில் கச்சி வழங்கும் பெருமாள் என்று பெயர் பொறித்த நாணயங்கள் நாணயவியல் தந்தை வால்டர் எலியட் என்பவரால் அவரது நூலில் 145ஆவது படமாக வெளியிடப்பட்டுள்ளது.[10]. பொ.பி. 1260 - 1365க்கும் இடைப்பட்ட காலங்களில் வெளியிடப்பட்ட இவற்றில் கச்சி வழங்கும் பெருமாள் என்று மூன்று வரிகளில் எழுதப்பட்டுளன. மற்றொரு வகைக்காசில் இரு கயல்களுக்கிடையில் சு என்னும் எழுத்தும் காணப்படுகின்றது.[11] அடுத்து எல்லாம் தலையாயன் என்று பெயர் பொறித்த ஐந்து வகைக்காசுகள் கிடைத்துளன. இப்படி கிடைத்ததை கொண்டு அதிகளவு காசுகளின் வேறுபாடு அறிவதற்காக வேண்டுமென்றே இதைப்போல காசுகள் வெளியிடப்பட்டது என்பதை அறியலாம்.[12] அடுத்து கோதண்டராமன் என்று பெயர் பொறித்த நாணயங்கள் கிடைத்துளன. கோதண்டராமன் நாண்யங்கள் பற்றி மாற்று கருத்துகள் இருந்த போதிலும்[13] இம்மன்னனின் கல்வெட்டுகளில் இவன் பட்டப்பெயர் கோதண்டராமன் என்றிருப்பதைக் கொண்டு[14] இவை முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வெளியிடப்பட்டது என்பதை அறியலாம். வெளியிணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia