யாழ்ப்பாணக் கல்லூரி
யாழ்ப்பாணக் கல்லூரி (Jaffna College) இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டை என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு தனியார் பாடசாலை ஆகும்.[1] அமெரிக்க கிறிஸ்தவ மறைப்பணியாளர்களால் 1823 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பட்டிக்கோட்டா மதப்பள்ளி 1867 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கல்லூரியாக மாற்றப்பட்டது. வரலாறு1816 ஆம் ஆண்டில் அமெரிக்க இலங்கை மிசன் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட இதன் கிளைகளில் ஒன்று வட்டுக்கோட்டையிலும் நிறுவப்பட்டது. அமெரிக்க மிசன் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்தியது. இவ்வகையில் முதன் முதலாக தெல்லிப்பழையில் "பொதுச் சுயாதீனப் பள்ளிக்கூடம்" (யூனியன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. குடாநாட்டில் உள்ள திறமை வாய்ந்த ஆண் பிள்ளைகளுக்கென வட்டுக்கோட்டையில் 1823 ஆம் ஆண்டில் பட்டிக்கோட்டா மதப்பள்ளி (Batticotta Seminary) நிறுவப்பட்டது. இதன் அதிபராக டானியல் புவர் (danial poor) என்பவர் இருந்தார். இம்மதப்பள்ளி அங்கு சேர்க்கப்படும் மாணவர்களை கிறித்துவத்துக்கு மதம் மாற்றுவதையே முக்கிய நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான மாணவர்கள் தமது இந்து சமய நம்பிக்கையையே கடைப்பிடித்து வந்தனர். இதனை அடுத்து 1855 ஆம் ஆண்டில் இம்மதப்பள்ளி மூடப்பட்டது. பட்டிக்கோட்டா மதப்பள்ளியின் பழைய மாணவர்களும், உள்ளூர் கிறித்தவர்களும் இப்பள்ளியை மீளத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விட்டதை அடுத்து 1872 சூலை 3 இல்[2] இக்கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் மீளவும் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. பழைய மாணவர்கள்
இவற்றையும் பார்க்கபடக் காட்சியகம்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia