வருங்கால இந்தியா கட்சி
வருங்கால இந்தியா கட்சி (The Future India Party) (சுருக்கமாக வ. இ. க.) என்பது தமிழ்நாட்டில் சென்னை மாநகரில் அமைந்துள்ள ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும்.[2][3] இந்தியக் குடியரசின் அனைத்துத் தேர்தல் செயன்முறைகளை நிருவாகம் செய்யும் சுய அதிகாரம் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிக்குச் சுதந்திரமான தனி அரசியல் கட்சியாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.[4] 2012 இல் நிறுவப்பட்ட இக்கட்சி சூன் 6, 2013 இல் முறையாக தொடங்கப்பட்டு, 2014 இன் இறுதியில் அதிகாரப்பூர்வமான அரசியல் கட்சியாக இந்திய அரசியலமைப்பின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29A, 1951 இன் படி அங்கீகாரம் பெற்றது.[5][6][7][8][9] இக்கட்சியின் தலைவர் த. சுபி ஆவார்.[10] இந்திய அரசியலுக்குள் படித்த இளைஞர்களைக் கொண்டு வருவதே இக்கட்சியின் முக்கிய இலக்காகும்.[11][12] இக்கட்சியின் தலைவர் சுபி ஆவார், இவர் வானூர்தி பொறியாளர் மற்றும் இளம் சமூக ஆர்வலர் ஆவார், இவர் 2013 அம் ஆண்டில் இருந்து இக்கட்சியின் தலைவராக பதவி வகிக்கிறார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia