அப்சரித்து வம்சம்
அப்சரித்து வம்சம் (Afsharid dynasty (Persian: افشاریان) இவ்வம்சத்தினர் பாரசீகத்தின் வடகிழக்கில் வாழ்ந்த துருக்கிய பழங்குடி அப்சரித்து இன மக்கள் ஆவார். இராணுவ வலிமை படைத்த அப்சரித்து வம்சத்தினர் பாரசீகத்தில், பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கிபி 1736ல் நாதிர் ஷா என்ற படைத்தலைவர் தலைமையில், சபாவித்து வம்சத்தின் இறுதி மன்னரை வென்று, தன்னை ஈரானின் மன்னராக அறிவித்துக் கொண்டார்.[5] அப்சரித்து வம்சத்தினர் ஈரானை கிபி 1736 முதல் 1796 முடிய அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அப்சரித்து வம்சத்தினருக்குப் பின் குவாஜர் வம்சத்தினர் ஈரானை ஆண்டனர். பாரசீக அப்சரித்து வம்சத்தின் மன்னர் நாதிர் ஷாவின் ஆட்சிப் பரப்பில் தற்கால ஈரான் உள்ளிட்ட ஆர்மீனியா, ஜார்ஜியா, அசர்பைஜான், உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான் வடக்கு காக்கேசியாப் பகுதிகள், பகுரைன், ஓமன், ஈராக்கின் பகுதிகள், ஆப்கானித்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இருந்தது. அப்சரித்து வம்சத்தின் நாதிர் ஷாவின் மறைவிற்குப் பின்னர் அவரது பேரரசு சந்த் இராச்சியம், துராணி இராச்சியம், கர்டிலி-காகேத்தி எனும் ஜார்ஜியா மற்றும் காக்கேசியா கானகங்கள் எனப் பலவாகச் சிதறுண்டது. அதனால் அப்சரித்து வம்சத்தினர் தங்கள் இறுதிக் காலத்தில் பாரசீகத்தின் வடகிழக்கில் அமைந்த குராசான் என்று குறுகிய பகுதியை மட்டும் ஆட்சி செய்தனர். இறுதியாக குவாஜர் வம்சத்தின் முகமது கான் குவாஜர் என்பவர் 1796ல் அப்சரித்து வம்சத்தின் ஆட்சியை முற்றிலுமாக ஈரானிலிருந்து அகற்றி பாரசீகப் பேரரசை நிறுவினார். அப்சரித்து வம்சத்தின் தோற்றம்அப்சரித்து வம்சத்தின் நிறுவனரான நாதிர் ஷா தற்கால ஈரானின் வடகிழக்கில் உள்ள குராசான் பகுதியில் துருக்கிய அப்சரித்து நாடோடிப் பழங்குடி இனத்தில் பிறந்தவர்.[6] நாதிர் ஷா அப்பகுதியில் பழங்குடியினத் தலைவராக உயர்ந்தார்.[7] நாதிர் ஷா சபாவித்து பேரரசின் பாரசீகப் படையில் சேர்ந்து, 1729ல் பாரசீகத் தலைநகரைக் கைப்பற்ற வந்த ஆப்கானியப் படைகளின் தலைவர் அஷ்ரப் கானை விரட்டியடித்தார். உதுமானியப் பேரரசு மற்றும் உருசியப் பேரரசுகளிடம் இழந்த பாரசீகத்தின் நடு ஆசியாவின் பகுதிகளை நாதிர் ஷா மீட்டெடுத்தார்.[8] உதுமானியப் பேரரசுடன் போர் மற்றும் காக்கேசியப் பகுதிகளை மீண்டும் வெல்லுதல்![]()
நாதிர் ஷா மன்னராதல்8 மார்ச் 1736ல் பாரசீகத்தின் மன்னராக 8 மார்ச் 1736ல் உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசின்]] தூதுவர் முன்னிலையில் நாதிர் ஷாவிற்கு முடிசூட்டப்பட்டது.[9] மொகலாயப் பேரரசின் மீது படையெடுத்தல்![]() ![]() வடக்கு பாரசீகத்தின் துருக்கிய அஃப்ஷர் வம்சத்தின் நாதிர் ஷா[10]1738 ஆம் ஆண்டு கந்தகாரை கைப்பற்றி, கஜினி, காபூல், பெசாவர், சிந்து மற்றும் லாகூர் பகுதிகளைக் கைப்பற்றி, பின்னர் சிந்து ஆற்றை கடந்து, முகலாயப் பேரரசின் பகுதியில் புகுந்தார். அப்போது தில்லி முகலாய மன்னர் முகம்மது ஷாவின் படைகளுக்கும், நாதிர் ஷாவின் படைகளுக்கும், 1739 ல் அரியானாவின் கர்ணல் பகுதியில் போர் நடைபெற்றது. இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொகலாய வீரர்களை, நாதிர் ஷாவின் படைகள் கொன்று குவித்தது. தோல்வியடைந்த முகமது ஷா, நாதிர் ஷாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் விளைவாக கோஹினூர் வைரமும், விலை மதிப்பு மிக்க மயிலாசனமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் நாதிர் ஷாவுக்கு கொடுக்கப்பட்டன. முகமது ஷாவின் மகளை, நாதிர் ஷா தன் மகனுக்கு திருமணம் செய்வித்தார்.[11] நடு ஆசியா பகுதிகளை கைப்பற்றல்இந்தியப் படையெடுப்பிற்குபின் நாதிர் ஷா தன் மகன் ரேசா குவாலி மிர்சாவை பெரும் படைகளுடன் அனுப்பி நடு ஆசியாவின் திரான்சாக்சியானா பகுதிகளை கைப்பற்றினார். அப்சரித்து வம்சத்தின் வீழ்ச்சி![]() 1747ல் நாதிர் ஷா இறப்பிற்கு பின் அவரது அண்ணன் மகன் அடில் ஷா, தன்னை பாரசீகப் பேரரசின் மன்னராக அறிவித்துக் கொண்டார். அதே நேரத்தில், முன்னாள் கருவூலத்துறை அமைச்சராக இருந்த அகமது ஷா துரானி தன்னை துராணிப் பேரரசராக அறிவித்துக் கொண்டார். பாரசீகத்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் ஆப்கானித்தான் ஆகியவை துராணிப் பேரரசின் பகுதிகளானது. பாரசீகத்தின் நடு ஆசியாப் பகுதியின் கர்டிலி-காக்கேத்தி இராச்சியம் ஜார்ஜியர்களின் ஆட்சியின் கீழ் சென்றது.[13] நடு ஆசியாவின் அசர்பைஜான், ஆர்மீனியா போன்ற பகுதிகள் தன்னாட்சி நாடுகளாக அறிவித்துக் கொண்டது.[14] அப்சரித்து வம்சத்தின் இறுதி காலத்தின் அதன் ஆட்சிப் பரப்பு, கிழக்கு பாரசீகத்தின் கொரசான் மாகாணம் அளவில் சுருங்கியது 1796ல் குவாஜர் வம்சத்தின் முகமது கான் குவாஜர், கிழக்கு பாரசீகத்தின் மசுகது நகரத்தைக் கைப்பற்றி, அப்சரித்து வம்சத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அப்சரித்து வம்ச பாரசீக ஆட்சியாளர்கள்
குடும்ப மரம்
இதனையும் காண்கமேற்கோள்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia