அமதான் மாகாணம்
அமாதான் மாகாணம் (Hamadan Province, பாரசீகம்: استان همدان:) ஈரான் நாட்டின் 31 மாகாணங்களில் ஒரு மாகாணம் ஆகும். அமாதான் நகரம் இம்மாகாணத்தின் மையமாக செயல்படுகிறது. 19546 கிலோமீட்டர் 2 பரப்பளவு கொண்ட அமாதான் மாகாணத்தில் 1996 ஆம் ஆண்டில் மக்கள் தொகையாக 1.7 இலட்சம் நபர்கள் இருந்ததாகவும், 17,58,268 நபர்கள் இருந்ததாக 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் தெரிவிக்கின்றன. ஈரான் நாட்டின் நிர்வாக வசதிக்காக, 2014 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட ஐந்து மண்டலங்களில் இம்மாகாணம் நான்காவது மண்டலத்தில் வைக்கப்பட்டது[2]. அமாதான், தூசெர்கான், நகாவந்து, மலாயெர், அசாதாபாத்து, பகர், பாமெனின், இரசான், கபுத்ரகாங்கு போன்றவை இம்மாகணத்தின் பெரிய நகரங்களாகும். புவியியல்வடமேற்கிலிருந்து தென்மேற்கை நோக்கிச் செல்லும் அல்வாண்டு மலையின் உயரப்பகுதியில் அமாதான் மாகணம் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றான ஈரான் நாட்டின் சக்ரோசு மலைத்தொடரில் ஒரு பகுதி அல்வாண்டு மலையாகும். அமதானில் மிதவெப்ப சூடான கோடை காலமும் அதனுடன் ஒப்பீட்டத்தக்க அளவில் குளிர் காலமும் நிலவுகிறது. மக்கள் தொகையும் மொழிகளும்மக்கள் தொகையியல்கவுண்டிகள் எனப்படும் பெருநகரங்களில் , மலாயெர் மாவட்டம் 310000 நபர்கள். நகாவந்து மாவட்டம் 200000 நபர்கள், அமாதான் மாவட்டம் 700000 நபர்கள், தூசெர்கான், அசாதாபாத்து மாவட்டங்கள் கிட்டத்தட்ட 150000 நபர்கள், இரசான், கபுத்ரகாங்கு, பகர் மாவட்டம் ஒவ்வொன்றும் சுமார் 120000 முதல் 140000 நபர்கள் வரையும் மக்கள் தொகையாகக் கொண்டுள்ளன. 1997 ஆம் ஆண்டின் அலுவல்பூர்வ புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமாதான் மாவட்டத்தில் அப்பொழுது 5634444 நபர்கள் வழ்ந்ததாக கணக்கிடப்பட்டது. மொழிகள்
பெருநகரங்களின் மொழிகள்
வரலாறு![]() ![]() ஈரான் மற்றும் அதன் நாகரிகத்தின் மிக பழமையான பகுதிகளில் அமாதான் மாகாணமும் ஒன்றாகும். இந்த பகுதியில் காணப்படும் எச்சங்கள் இந்த உண்மையை உறுதி செய்கின்றன. மெதியாவில் வாழ்ந்த மெதியர்கள் பாரசீகர்களுடன் கூட்டு சேர்வதற்கு முன்னர் அவர்களின் கூடுமிடமாக இருந்த எக்பாடனா மட்டும் இன்றைய அமாதானில் எஞ்சியிருக்கிறது. எக்பாடானவை அரசர் யாம்சித் கட்டியதாக கவிஞர் பெர்தோசி சொல்கிறார். முற்காலத்தில் இங்கே ஒரு கோட்டை இருந்ததாக வரலாற்று பதிவுகள் சொல்கின்றன. ஆஃப்ட் எசார் என்ற பெயரிலான அக்கோட்டையில் ஆயிரம் அறைகள் இருந்ததாகவும் அதன் ஆடம்பரம் பாபிலோன் கோபுரத்திற்கு சமமானதாகவும் இருந்தது என்றும் நம்பப்படுகிறது. நகரின் கட்டமைப்புகள் கி.மு. 700 முதல் ஆட்சிபுரிந்த மெதிய அரசர் தியா ஆக்குடன் தொடபுடையதாக அறியப்படுகிறது. கிரேக்கப் பதிவுகளின்படி இந்நிலப்பகுதியானது எக்படான் பகுதி என்று குறிக்கப்படுகிறது. பார்த்தியன் காலத்தில், சிதெசிபோன் பாரசீகத்தின் தலைநகராக மாறியது, மற்றும் பார்த்தியன் ஆட்சியாளர்களின் கோடைக்கால தலைநகரமாகவும் வசிப்பிடமாகவும் அமாதான் கருதப்பட்டது. பார்தியர்களுக்கு பிறகு, சசானித்துகள் அதேபோல தங்கள் கோடை அரண்மனைகளை அமாதானில் கட்டினார்கள். 633 ஆம் ஆண்டில் நகாவந்து போர் நடந்த போது அமாதான் அரேபியர்களால் கைப்பற்றப்பட்டது. சில காலம் அமாதான் செழித்தும் சில நேரங்களில் அதன் செழிப்பு மங்கியும் இருந்துள்ளது. புவாய்கிட்டுகளின் காலத்தில் அமாதான் ஏராளமான சேதங்களைக் கண்டது. 11-வது நூற்றாண்டில், செல்யூக்கர்கள் தலைநகர் பாக்தாத்தை மீண்டும் அமாதானுக்கு மாற்றினார்கள். ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் பொதும் அமாதான் நகரத்தின் நிலை கேள்விக்குறியாகவே இருந்து வந்துள்ளது. தைமூர்களின் படையெடுப்பின் போது முற்றிலுமாக இந்நகரம் அழிக்கப்பட்டது. ஆனால் சபாவித் சகாப்தத்தில் இந்த நகரம் மீண்டும் ஒருமுறை தழைத்தது. 18 ஆம் நூற்றாண்டில், அமாதான் ஒருமுறை ஓட்டோமன்களுக்கு தாரைவார்க்கப்பட்டது.. ஈரான் மற்றும் ஓட்டோமான்கள் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதால் நாதிர்சா மீண்டும் இதைக் கைப்பற்றினார். இன்றைய அமாதான்இன்றைய அமாதான் மாகாணத்தில் 18,20,000 நபர்கள் வாழ்கின்றனர். நிர்வாக வசதிக்காக இம்மாகாணம் 8 நிர்வாக கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டங்கள் மேலும் மாவட்டம் என்ற துணைப்பிரிவுகள் 23 ஆக பிரிக்கப்பட்டு இயங்குகிறது. மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia