ஈரான் 31 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களின் தலைவராக ஆளுநர் விளங்குகிறார். ஒவ்வொரு மாகாணத்தின் ஆளுநரும், ஈரானின் உள்துறை அமைச்சரால் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு நியமிக்கப்படுவார்.
வரலாறு
1950 வரை. ஈரான் 12 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை அர்தலான், அசர்பைசான், பலூச்சிஸ்தான், பார்ஸ், கிலன், அராக்-எ அஜம், கொரசான், குசஸ்தான், கெர்மான், இலாரஸ்தான், லொரஸ்தான், மஜந்தரன் ஆகும். 1950-ஆம் ஆண்டு ஈரான் நாடு 10 மாகாணங்களுடனும் அதன் கீழ் ஆளுகைகளுமாய் நிர்வாகச் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அவை கிலான்; மஜந்தரன்; கிழக்கு அசர்பைசான்; மேற்கு அசர்பைசான்; கேர்மான்ஷா; குசஸ்தான்; ஃபர்ஸ்; கெர்மான்; கொரசான் மற்றும் இஸ்ஃபஹான் ஆகும். 1960-இலிருந்து 1981 வரை ஒவ்வொரு ஆளுகைகளும், மாகாணங்களாக உயர்த்தப்பட்டன. மிகச் சமீபமாக 2004ஆம் ஆண்டு மிகப்பெரிய மாகாணமான கொரசான் மாகாணத்தை மூன்று மாகாணங்களாக ஈரான் பிரித்துள்ளது.
மே 31, 1997 அன்று, அலியாபாத்கொன்பாத்-எ-காவுஸ், கொர்கான், கொர்த்குய், மினுதஸ்து மற்றும் துருக்கமான் ஆகிய ஷேரிஸ்தான்கள், மஜந்தரன் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கொலெஸ்தான் மாகாணமாக அறிவிக்கப்பட்டது. 1937 வரை கொர்கான் எஸ்தராபா அல்லது அஸ்தராபா என்று அழைக்கப்பட்டது
1950-க்கும், 1979-க்கும் இடைப்பட்ட காலத்தில், கெர்மான்ஷா மாகாணமும், நகரமும், கெர்மான்ஷாஹன் என்று அழைக்கப்பட்டது. 1979-க்கும், 1995-க்கும் இடைப்பட்ட காலத்தில், அது "பக்தரான்" என்று அழைக்கப்பட்டது.
மஜந்தரன் மாகாணத்தின் ஒரு பகுதியாக முதலில் இருந்தது. 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள், இஸ்ஃபஹான் , செம்னன், மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டன.
மஜந்தரன் மாகாணத்தின் ஒரு பகுதியாக முதலில் இருந்தது. 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள் இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்க்கப்பட்டன
முதலில் இஸ்ஃபஹான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[4] 1986-இல், கெர்மான் மாகாணத்தின் ஒரு பகுதி யசுது மாகாணத்திற்கு மாற்றப்பட்டது. 2002-இல், தபசு ஷாரேஸ்தான் (பரப்பளவு: 55,344 km²) கொரசான் மாகாணத்திலிருந்து யசுது மாகாணத்திற்கு மாற்றப்பட்டது
முதலில் கிலான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள் இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்க்கப்பட்டன