அம்ரி, சிந்துஅம்ரி என்பது, பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் கி.மு 3600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொல்பழங்காலக் குடியிருப்பு ஆகும். இக்களம், மொகெஞ்சதாரோவுக்குத் தெற்கே ஐதராபாத் - தாரு சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில், ஐதராபாத்துக்கு வடக்கே 1000 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. தொல்லியல்இது எக்காலத்திலும் ஒரு பெரிய நகரமாக இல்லாதிருந்தபோதும், இது பல்வேறு அடுக்குகளாகக் காணப்படுகிறது.[1] அரப்பாவுக்கு முந்திய காலம்கி.மு 3600க்கும் 3300க்கும் இடைப்பட்ட இதன் தொடக்க நிலையில், இது ஒரு அரண்செய்யப்பட்ட நகரமாக இருந்தது. இது சிந்து வெளி நாகரிகத்தின் அரப்பாவுக்கு முந்திய நிலையைச் சேர்ந்ததாகும். கிர்த்தார் மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருந்த இது அக்காலத்தில் கீழ் சிந்துப் பகுதியில் ஒரு முக்கியமான நகர மையமாக விளங்கியது. கி.மு 6000க்கும் 4000க்கும் இடையில் வேளாண்மைச் சமுதாயத்தின் உருவாக்கமும் தொடர்ந்து நகராக்கமும் ஏற்பட்ட பலூச்சித்தானுக்கு அண்மையில் அம்ரி அமைந்துள்ளது. கால வரிசைப்படி, அம்ரி, ரெகுமான் டேரிக்குப் பிந்தியது ஆகும். சிந்து ஆற்றின் மேற்குக் கரையில், 8 எக்டேரில் அமைந்துள்ள பண்டைக்கால மேடுகளில் விரிவான அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் தனியான இயல்புகளைக் கொண்டிருப்பதால், அம்ரிப் பாண்டங்கள் என அழைக்கப்படுகின்றன. பிற அரப்பாவுக்கு முந்தியகால நகரங்களைப்போல இப்பகுதியில் எழுத்துக்கள் எதுவும் காணப்படவில்லை. கி.மு 2500 அளவில் இங்கே பரவலான தீ ஏற்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. பிற்காலம்பிற்பட்ட காலப்பகுதிகளில் இப்பகுதியின் பண்பாட்டு இயல்புகள் பின்வருமாறு காணப்படுகின்றன.
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia