ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி
ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி (1000 Thalaivangi Apoorva Chinthamani) என்பது 1947 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் கற்பனை சாகசத் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கி தயாரித்தார். படத்திற்கு பாரதிதாசன் திரைக்கதை உரையாடல் எழுதினார். ஆனால் தன் பெயரைப் பயன்படுத்தவேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது[1]. இசையமைத்தவர் ஜி. ராமநாதன். இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், என். ஆர். சுவாமிநாதன், வி. என். ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] படம் மக்களிடையே பெரும் வெற்றியைப் பெற்றது.[3] இந்தப் படம் அதே தயாரிப்பு நிறுவனத்தால் தெலுங்கில் 1960 இல் சஹஸ்ர சிர்சேத அப்போர்வ சிந்தாமணி (1960) என்ற பெயரில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது.[4][5] கதைபூதகணத்திடம் துறவி (எம். ஆர். சுவாமிநாதன்) ஒருவர் தன் ஆசைகள் எல்லாம் நிறைவேறவும், தான் எண்ணியதை நிறைவேற்றும் வல்லமை வேண்டியும் வரம்கேட்கிறார். அதற்கு அந்த பூதகம் நீ ஆயிரம் தலைகள் கொண்டுவந்து வேள்வி செய்தால் நீ வேண்டியது கிடைக்கும் என்கிறது. அத்தனை தலைகளுக்கு நான் எங்கே போவேன் என்று துறவி கேட்க, அதற்கு அந்த பூதகணம் ஆதித்தபுரி இளவரசி அபூர்வ சிந்தாமணியிடம் (வி. என். ஜானகி ) செல் அவளின் அழகில் மயங்கிடாமல் அவளை இதற்குப் பயன்படுத்திக்கொள் என்கிறது. இதனையடுத்து புறவி ஆதித்தபுரி அரண்மனைக்குக் செல்கிறார். துறவியைப் பார்த்ததும் அவரை தன் குருவாக அபூர்வசிந்தாமணி ஏற்றுக் கொள்கிறாள். அபூர்வ சிந்தாமணியின் தாய்மாமன் அவளை மணக்க விரும்புகிறான். அது குறித்து துறவியிடம் அபூர்வ சிந்தாமணி கூறுகிறாள். அதற்கு துறவி நான் உனக்கு மூன்று கேள்விகளைச் சொல்கிறேன். அதை உன்ன மணக்க வருபவனிடம் கேள். சரியான பதிலைக் கூறினால் மணந்துகொள். தவறாக சொன்னால் அவன் தலையைக் கொய்துவிடு என்கிறார். தாய்மாமன் வருகிறான். அவனிடம் அபூர்வ சிந்தாமணி கேட்ட கேள்விக்கு அவனால் சரியாக பதில் சொல்லமுடியவில்லை. அவன் தலை கொய்யப்படுகிறது. அண்டை நாடுகளில் இருந்து அவள் அழகைக் கேள்விப்பட்டு வருபவர்களிடம் கேள்விகளைக் கேட்கிறாள். பதில் தெரியாததால் அவர்களில் தலைகளும் கொய்யப்படுகின்றன. இவ்வாறே அபூர்வ சிந்தாமணி 999 தலைகளைக் கொய்துவிடுகிறாள். தன் சகோதரர்கள் ஆறுபேர் அபூர்வ சிந்தாமணியால் கொல்லபட்டதை அறிந்த பக்கத்து நாட்டு இளவரசனான மெய்யழகன் (பி. எஸ். கோவிந்தன்) மாறுவேடமிட்டு ஆதித்தபுரிக்கு வருகிறான். சிந்தாமணியின் தோழி செங்கமலத்தை (எஸ். வரலட்சுமி) மெய்யழகன் காதலிக்கிறான். அவள் வழியாக செய்திகளைத் தெரிந்து கொள்கிறான். இளவரசர்கள் கொல்லப்படதுறவிதான் காரணம் என அறிந்து கொள்கிறான். பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை நடிப்பு
பாடல்கள்இப்படத்திற்கான இசையும், பாடல் வரிகளும் ஜி. ராமநாதனால் செய்யப்பட்டன.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia