ஆர். பாலசுப்பிரமணியம்
![]() ஆர். பாலசுப்பிரமணியம் (R. Balasubramaniam) தமிழ் நாடக, திரைப்பட நடிகராவார். இவர் 1930கள் முதல் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். வாழ்க்கைச் சுருக்கம்பாலசுப்பிரமணியம் தமிழ்நாடு, சுவாமிமலையில் பிறந்தவர்.[1] தஞ்சாவூர் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து, கும்பகோணத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியப் பணியுடன் கும்பகோணத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த வாணி விலாச சபையின் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பெண் வேடங்களில் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார்.[1] பட்டாபிராம சாத்திரியார் இராமாயணத்தை பகுதி பகுதியாக நாடகமாக்கி நடத்தி வந்த போது பாலசுப்பிரமணியம் சீதையாக நடித்து வந்தார். ஏ. ராஜகோபால் செட்டியார் இராமனாக நடித்து வந்தார். சில காலத்திலேயே பாலசுப்பிரமணியம் கம்சன், இராவணன் போன்ற வேறு வேடங்களிலும் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.[1] பாலசுப்பிரமணியத்தின் நாடகத்தைப் பார்த்த சிறீராமுலு நாயுடு துகாராம் (1938) திரைப்படத்தில் மும்பாஜியாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார். முசிரி சுப்பிரமணிய ஐயர் இதில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பாலசுப்பிரமணியம் இராகமாலிகையில் ஒரு பாடலும் பாடினார்.[1] இதன் பின்னர் சீதா ஜனனம், ரம்பையின் காதல், வேதாள உலகம்[2], மனோன்மணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக 1964 இல் வெளிவந்த கர்ணன் திரைப்படத்திலும், பின்னர் 1971 இல் வெளிவந்த ஆதிபராசக்தி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். ஆர். பாலசுப்பிரமணியம் ராஜசூயம் (1942) திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி, நடித்திருந்தார்.[3] நடித்த திரைப்படங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia