ஆயுத எழுத்து (தொலைக்காட்சித் தொடர்)
ஆயுத எழுத்து என்பது விஜய் தொலைக்காட்சியில் 15 சூலை 2019 முதல் 18 செப்டம்பர் 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரில் சரண்யா, ஸ்ரீது கிருஷ்ணன், அம்ஜத்கான், ஆனந்த், மௌனிகா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[2] இந்த தொடர் 18 செப்டம்பர் 2020 இல் 258 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. கதைச்சுருக்கம்கிராமத்துக்கு தான் செய்வதுதான் நல்லது என்று அடிதடி, அடாவடி என வாழ்பவர் காளியம்மா. அரசு அதிகாரிகள், வெளியாட்கள் மீது நம்பிக்கை இல்லாதவர். துணை ஆட்சியரான இந்திரா அந்த கிராமத்துக்கு வருகிறார். இவர்கள் இருவருக்கும் மோதல் ஆரமிப்பிக்கின்றது. இந்நிலையில் காளியம்மா மகன் சக்திவேலுக்கும், இந்திராவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால், அவர் காளியம்மாவின் மகன் என்பது இந்திராவுக்கு தெரியவில்லை. இந்த காதல் காளியம்மாவுக்கும் மற்றும் இந்திராவுக்கு உண்மை தெரியும்போது அவர் எடுக்கும் முடிவு என்ன? என்பது தான் இந்த தொடரின் கதை. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
துணை கதாபாத்திரம்
நடிகர்களின் தேர்வுஇந்த தொடரில் துணை ஆட்சியர் இந்திராவாக 'ஸ்ரீது கிருஷ்ணன்' நடித்தார். அதற்க்கு பிறகு இவரின் கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா நடிக்கின்றார். பிரபல நடிகை மௌனிகா என்பவர் காளியம்மா என்ற கதாபாத்திரத்திலும், இவரின் மகனாக அம்ஜத்கான் என்பவர் சக்தி வேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு பதிலாக தற்பொழுது 'ஆனந்த்' நடித்துள்ளார். நேர அட்டவணைஇந்த தொடர் சூலை 15 2019 முதல் மார்ச் 14, 2020 ஆம் ஆண்டு வரை வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. பாக்கியலட்சுமி என்ற தொடருக்காக மார்ச் 16, 2020 முதல் மாலை 6 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. பின்னர் 17 ஆகஸ்ட் 2020 முதல் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பானது.
மறு ஆக்கம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia