ஆர். நாகரத்தினம்மாள்
ஆர். நாகரத்னம்மாள் (R. Nagarathnamma) (1926–2012) ஓர் இந்திய நாடக ஆளுமையும், பெங்களூரை தளமாகக் கொண்ட அனைத்து மகளிர் நாடகக் குழுவான ஸ்திரீ என்ற நாடக மன்றத்தின் நிறுவனர் ஆவார். இவர் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றுள்ளார்.[1] இந்திய அரசால் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது 2012 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[2] சுயசரிதைநாகரத்னம்மாள் 1926 இல்[3] மிதமான நிதி வசதி கொண்ட குடும்பத்தில், தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின்[4] மைசூரில்[5] பிறந்தார். தனது 12 வயதில் தொழில்முறை நாடகங்களில் பணியாற்றத் தொடங்கினார்.[6] சிறீ சாமூண்டீசுவரி நாடக சபா, குப்பி வீரண்ணா நடத்தி வந்த குப்பி நிறுவனம், இரண்ணையாவின் மித்ரா மண்டலி, எச்எல்என் சிம்ஹா போன்ற குழுக்களுடன் பணியாற்றினார்.[4][7] பின்னர், 1958ஆம் ஆண்டில், இவர் ஸ்திரீ நாடக மண்டலியை நிறுவினார்.[5] இது கர்நாடகாவில் தொடங்கப்பட்ட முதல் அனைத்து மகளிர் நாடகக் குழு என்று அறிவிக்கப்பட்டது.[4][6] அதில் இவர் ஒரு நடிகையாகவும், நாடகங்களின் இயக்குநராகவும் இருந்தார்.[3][7] நாகரத்னம்மாள் ஆண் கதாபாத்திரங்களை, குறிப்பாக புராணக் கதாபாத்திரங்களை சித்தரிப்பதற்காக அறியப்படுகிறார்.[8] கம்சன், கிருட்டிணன், இராவணன், துரியோதனன், வீமன் போன்ற குறிப்பிடத்தக்க நடிப்பால் இவர் பாராட்டப்படுகிறார்.[4][5][6][7] இவர் தனது குழுவுடன் இந்தியாவில் பல மாநிலங்களில் பயணம் செய்துள்ளார். கிருஷ்ண கருடி இவரது முக்கிய நாடகங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.[4] இவர் 15 கன்னடப் படங்களிலும், தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[6] கமனபில்லு, பரசங்கடா ஜென்டிதிம்மா, ரோசாப்பூ ரவிக்கைக்காரி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.[4] இறப்புநாகரத்னம்மாள் 6 அக்டோபர் 2012 அன்று,[5] இறந்தார்.[6] விருதுகளும் அங்கீகாரமும்நாகரத்னம்மாள் தாகூர் ரத்னா விருது[5], குப்பி வீரண்ணா விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[6] கர்நாடக அரசின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான ராஜ்யோத்சவ பிரசாஸ்தி விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[6] இவர் 1992இல் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார்.[1][6][7] 2012ஆம் ஆண்டில், இந்திய அரசு நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதுக்கான குடியரசு தின கௌரவப் பட்டியலில் இவரைச் சேர்த்து பத்மஸ்ரீ விருதை வழங்கியது.[2] இரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்தநாளை நினைவுகூரும் நிகழ்வில் 2012ஆம் ஆண்டில் இவருக்கு சங்கீத நாடக அகாதமி தாகூர் ரத்னா வழங்கப்பட்டது. இவற்றையும் பார்க்கவும்சான்றுகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia