இசுலாமிய மெய்யியல்
இசுலாமிய மெய்யியல் என்பது இசுலாமிய சமய, சமூக, பண்பாட்டுடன் தொடர்புடைய மெய்யியல் ஆகும். பொதுவாக இது இசுலாமியச் சூழலில், இசுலாமியர்களால் ஆக்கப்பட்டது.[1] இசுலாமிய மெய்யியல் பாரசீகம், அரபு, உருது, இந்தோனேசியன், துருக்கி, ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் ஆக்கப்பட்டு பகிரப்படுகிறது. இசுலாமிய மெய்யியலில் இறை, சட்டம், சமய நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்குமான உறவு ஆகியவை பற்றிய ஆய்வுகள் முக்கியமானவை. ஆரம்பகால இசுலாமிய மெய்யியல் ஹிஜ்ரி 2ஆம் நுாற்றண்டு இசுலாமிய வருடத்தில்(கி.பி.9ஆம் நுாற்றாண்டு) தொடங்கியதுடன்,ஹிஜ்ரி 6ஆம் நுாற்றாண்டு (கி.பி. 12ஆம் நுாற்றாண்டு) வரை நீடித்தது.இசுலாமிய பொற்காலம் என அறியப்படும் காலப்பகுதியில்,நவீன மெய்யியல் மற்றும் விஞ்ஞானம் போன்ற துறைகளிலும் ஐரோப்பாவின் மறுமலர்ச்சியிலும் இசுலாமிய மெய்யியல் ஒரு முக்கிய செல்வாக்கைப் பெற்றிருந்தது.இச் செல்வாக்கு 'உலகின் ஒரு மிகப்பெரிய தொழினுட்பம் உலக வரலாற்றில் பரிமாறிக் கொள்ளப்பட்டது'[2] என்ற கருத்தால் பரதிநித்துவப்படுத்தப்பட்டு இருந்தது. அக்கறைகள்
கருத்துருக்கள்
வரலாறு
மெய்யியலாளர்கள்வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia