இந்து சமய திருமணம்![]() ![]() இந்து திருமணம் (மராத்தி: लग्न (लग्न), கல்யாணம்; கன்னடம் मुद्वे (मदुवे); தெலுங்கு: कल्याण அல்லது பெல்லி) என்பது இந்துக்களுக்கான பாரம்பரிய திருமண விழாவைக் குறிக்கிறது. 'திருமணம்' என்ற சொல்லின் நேரடிப் பொருள் - குறிப்பாக தாங்குவது என்பதாகும். இந்தியாவில் திருமணம் என்பது அக்னி தேவன் சாட்சியாக கடவுளால் நிச்சயக்கப்படுவதாக கருதப்படுகிறது. மணமக்களின் புனிதமான சங்கம் என்றும் கருதப்படுகிறது.[1]திருமணம் ஒரு புனிதமான சடங்காகக் கருதப்படுகிறது.[2]மணமக்கள் அக்னியை சுற்றி வலம் வரும் சடங்கின்றி நடத்தப்படும் திருமணங்கள் செல்லாது என இந்திய உச்ச நீதிமன்றம் 2024ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியுள்ளது.[3] [4]? இந்து திருமண விழா மிகவும் வண்ணமயமானதுடன் பல நாட்கள் நீடிக்கும். மணமகன் மற்றும் மணமகள் வீடுகள் - நுழைவாயில், கதவுகள், சுவர்கள், தரை, கூரை வண்ணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிப்படுகிறது. முக்கிய திருமணச் சடங்குகள்![]() இந்து சமய வேதங்களின்படி, திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான சங்கமம் ஆகும். இதில் தர்மம் (கடமை), அர்த்தம் (செல்வம் மற்றும் பிற சொத்துகளைப் பெறுதல்), காமம் (பொருள் மற்றும் பிற) மற்றும் மோட்சம் (நித்திய விடுதலை) ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கான உறுதிப்பாடு உள்ளது. இந்து திருமணங்களில் மூன்று முக்கியச் சடங்குகள் கொண்டுள்ளது. இவைகள் குடும்ப மரபுகள், உள்ளூர் மரபுகள், குடும்பங்களின் வளங்கள் மற்றும் பிற காரணிகளை பிரதிபலிக்கிறது.
திருமணத்திற்கு பிந்தைய சடங்குகள்தென்னிந்தியாவில் மட்டும் இந்து சமயத் திருமணங்களில் மணமகன், மணமகளுக்கு மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் வழக்கம் உள்ளது. தெலுங்கு பேசும் மக்கள் தாலி கட்டிய பிறகு நாகவல்லி சடங்கு செய்வர். திருமணம் முடிந்த ஒரு நன்னாளில் சாந்தி முகூர்த்தம் நடைபெறும். இதனையும் காண்கமேற்கோள்கள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia