இலட்சுமிநாராயண் பாண்டே
இட்சுமிநாராயண் பாண்டே (Laxminarayan Pandey) (28 மார்ச் 1928 - 19 மே 2016) இந்தியாவின் 5வது, 6வது, 9வது, 10வது, 11வது, 12வது, 13வது மற்றும் 14வது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். பாரதிய ஜனதா கட்சியின் (BJP) அரசியல் கட்சியின் உறுப்பினராக இருந்தார். [1] [2] அரசியல் வாழ்க்கைபாண்டே பாராளுமன்ற உறுப்பினராக பல முறைகள் இருந்துள்ளார். முதலாவது 1971 மற்றும் 1977 இல் அவர் முறையே பாரதிய ஜன சங்கம் (BJS) மற்றும் பாரதிய லோக் தளம் (BLD) கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாண்டே, ஜனசங்கத்தின் மண்ட்சூரில் இருந்து முதல் பாராளுமன்ற உறுப்பினராகவும், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானியின் மிக நெருங்கிய உதவியாளராகவும் இருந்தார். இறப்புஇவர் தனது 88 வயதில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் முதுமை தொடர்பான நோய்களுடன் போராடி இறந்தார். [3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia