உயராட்சித் தலைவர்
பெரிய பிரித்தானியவின் உயராட்சித் தலைவர் என்பது ஐக்கிய இராச்சியத்தின் அரசுப்பணிப் பொறுப்புகளில் மிகவும் குறிக்கத்தக்க ஒன்றாகும். அரசு அலுவலர்களில் இரண்டாம் மிக உயரிய பதவி இதுவாகும். இப்பதவிக்கான நபரை பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஐக்கிய இராச்சியத்தின் அரசர் பணியமர்த்துவார். ஒன்றிணைப்புக்கு முன்னர் இங்கிலாந்து (வேல்ஸ் உட்பட) மற்றும் இசுக்கொட்லாந்துக்கு தனித்தனியாக உயராட்சித் தலைவர்கள் இருந்தனர்.[1] இப்பதவியினை வகிப்போர் சட்டப்படி அமைச்சரவையின் உறுப்பினராவர். இவர்களுடைய மிகவும் குறிப்பான பணி நீதிமன்றங்களை திறம்படவும், சுதந்திரத்தோடும் செயல்படவைப்பதாகும். 2005க்கு முன் இப்பணி பிரபுக்கள் அவைத் தலைமையாகவும், நீதித்துறையின் தலைமையாகவும் இருந்தது. ஆயினும் 2005இல் செய்யப்பட்ட சீர்திருத்தங்களின்போது முறையே அவைத்தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோருக்கு இவ்வதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. தற்போது இப்பதவியினை வகிப்பவர் டொமினிக் ராப் ஆவார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia