உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையம்
உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையம் (Ulundurpet railway station, நிலைய குறியீடு:ULU) தமிழகத்தின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1] இது விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது தெற்கு ரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் இரயில் நிலையங்களில் ஒன்றாகும். இடம் மற்றும் அமைப்புஇது தென்னிந்தியாவின் சுங்க மையங்களில் ஒன்றான உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி, தேசிய நெடுஞ்சாலை-45ன் அருகில் இந்த இரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் 2 நடைமேடை உள்ளது. போக்குவரத்துஉளுந்துபேட்டை நகரமானது, ஊராட்சி மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டம் மற்றும் உளுந்தூர்பேட்டை மாநில சட்டமன்ற தொகுதியின் தலைமையகமாக இருந்தாலும் இந்நிலையத்தைக் கடந்து செல்லும் பல தொடருந்துகளில், மதுரை - விழுப்புரம் பயணிகள் வண்டி மட்டுமே இந்த நிலையத்தில் நிறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia