கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் (Kallakurichi district) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கள்ளக்குறிச்சி ஆகும்.[1] தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் 8 சனவரி 2019இல் புதிதாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் கள்ளக்குறிச்சி நகரம் ஆகும். இப்புதிய மாவட்டத்தை 26 நவம்பர் 2019இல் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி க. பழனிச்சாமி முறைப்படி கள்ளக்குறிச்சியில் துவக்கி வைத்தார்.[2][3][4][5] கிரண் குராலா என்பவர் இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக நியமிக்கப்பட்டார்.[6] கள்ளக்குறிச்சி மாவட்டம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தொண்டை மண்டலத்தில் ஒரு பகுதியாக இருந்தது. மக்கள்தொகை பரம்பல்மதவாரியான கணக்கீடு (2011) இந்துக்கள் (91.03%) முஸ்லிம்கள் (4.24%) கிறித்தவர்கள் (4.45%) மற்றவை & சமயமில்லாதவர்கள் (0.28%)
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 13,47,204 ஆகும். அதில் ஆண்கள் 6,79,900 மற்றும் பெண்கள் 6,67,304 ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 980 பெண்கள் வீதம் உள்ளனர். ஆறுவயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,96,050 ஆகவுள்ளனர். மாவட்ட மக்கள்தொகையில் சராசரி எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை 10,20,833 ஆகும்.[7] இங்கு தமிழ் தான் பிரதான மொழியாகும், 95.97% மக்கள் தங்கள் தாய்மொழியாகப் பேசுகிறார்கள். 2.48% மக்கள் உருது மொழியையும், 1.38% பேர் தங்கள் முதல் மொழியாகவும் தெலுங்கைப் பேசுகிறார்கள்.[8] மாவட்ட பிரிப்பு கோரிக்கைகள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை பிரித்து திருக்கோவிலூர் தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 40 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாவட்ட எல்லைகள்கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கிழக்கில் விழுப்புரம் மாவட்டம், வடக்கில் தர்மபுரி மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், மேற்கில் சேலம் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம், தெற்கில் கடலூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. கல்ராயன் மலைஇம்மலை கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதி ஆகும். பச்சைமலை, ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன. 1,095 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2,000 முதல் 3,000 அடி வரை உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கல்ராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடபகுதி 'சின்னக் கல்ராயன்' மற்றும் தென்பகுதி 'பெரிய கல்ராயன்' என்று குறிப்பிடப்படுகின்றது. 'சின்னக் கல்ராயன்' மலைகள் சராசரியாக 2,700 அடி உயரமும், 'பெரிய கல்வராயன்' மலைகள் சராசரியாக 4,000 அடி உயரமும் கொண்டவை. மாவட்ட நிர்வாகம்தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக துவக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான எல்லைகளை வரையறுக்கவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு 19 சூலை 2019 அன்று ஒரு தனி அலுவலரை நியமித்துள்ளது.[9] கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 24 குறுவட்டங்களும், 562 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[10][11][12] வருவாய் கோட்டங்கள்வருவாய் வட்டங்கள்
உள்ளாட்சி அமைப்புகள்இம்மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்பில் 3 நகராட்சிகளும், 5 பேரூராட்சிகளும் கொண்டுள்ளது.[13] நகராட்சிகள்பேரூராட்சிகள்ஊரக வளர்ச்சி அமைப்புகள்இம்மாவட்டம் 9 ஊராட்சி ஒன்றியங்களையும், 412 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[14] ஊராட்சி ஒன்றியங்கள்
அரசியல்சட்டமன்றத் தொகுதிகள்புதிதாக துவக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் என 4 சட்டமன்றத் தொகுதிகளும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட புதிய தொகுதியாகும். இத்தொகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு (தனி), கங்கவள்ளி (தனி), ஆத்தூர் (தனி) ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் இந்த கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் அடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
காலநிலைஇங்குள்ள காலநிலை மிதமானது முதல் வெப்பமானது வரை இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 38°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21°C ஆகவும் இருக்கும். குளிர்கால மாதங்களில் வடகிழக்கு பருவமழையாலும், கோடை மாதங்களில் தென்மேற்கு பருவமழையாலும், இந்த மாவட்டம் மழையைப் பெறுகிறது. சராசரி ஆண்டு மழைப்பொழிவு 1,070 மி.மீ. ஆகும். பொருளாதாரம்கள்ளக்குறிச்சி பகுதி முழுவதும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மணிமுக்தா, கோமுகி அணைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பயனடைகின்றன. நெல், கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதனால் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகளும், மூன்று சர்க்கரை ஆலைகளும் உள்ளன. இந்த பகுதியில் நெல், கரும்பு, மக்காச்சோளம், மஞ்சள், பருத்தி, கம்பு, உளுந்து ஆகியவற்றை பயிரிடுகின்றனர். சுற்றுலாத் தலங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia