உ. இரா. அனந்தமூர்த்தி
யூ. ஆர். அனந்தமூர்த்தி என அழைக்கப்படும் உடுப்பி இராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி (Udupi Rajagopalacharya Ananthamurthy, கன்னடம்: ಉಡುಪಿ ರಾಜಗೋಪಾಲಾಚಾರ್ಯ ಅನಂತಮೂರ್ತಿ; 21 டிசம்பர் 1932 - 22 ஆகஸ்ட் 2014) கன்னட எழுத்தாளரும் இலக்கியவாதியும் ஆவார். கன்னட இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர். இந்திய அளவில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர்.[1] 1994 இல் இந்திய அளவில் இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்றவர். இந்த விருது இதுவரையிலும் எட்டு கன்னட எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.[2][3] 1998 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன் விருது வழங்கிச் சிறப்பித்தது[4]. புதினங்கள்
திரைத்துறைஇவரது நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களும் உண்டு.
மொழிபெயர்ப்புஅவருடைய சம்ஸ்காரா, அவஸ்தை உள்ளிட்ட சில புதினங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. 1993இல் சாகித்ய அகாதெமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]. விமர்சனம்இந்தியாவில் சாதி முறைகளை விவரிக்கும் வர்ணாஸ்ரமங்களை எதிர்த்த இவர் 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத்தேர்தலின்போது இந்தியாவின் பிரதமராக மோடி வந்தால் நாட்டைவிட்டுச் சென்றுவிடுவேன் என்று கருத்துக்கூறியதால் பல இன்னல்களுக்கு உள்ளானார்.[6] மறைவுஉடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அனந்தமூர்த்தி, ஆகஸ்ட் 22, 2014 அன்று பெங்களூரில் காலமானார்[7]. சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia