இவர் பக்கச்சார்பு மிக்கவர் இவர் அனைத்தையும் சமசுகிருத கண்ணோட்டத்தில் பார்ப்பவர் என்ற குற்றச்சாட்டு உண்டு.[5] இவர் தமிழ்மொழி, தமிழ் வரலாறு, திருக்குறள் போன்றவற்றின் மீது மீகுதியான திரிபுகளை மேற்கொண்டதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.[6] இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் கண்ணாடி” (The Mirror Tamil and Sanskrit) என்ற பெயரில் இவர் எழுதிய நூலில், தமிழின் எழுத்து முறை பிராமணர்களிடமிருந்து பெறப்பட்டது என்றும் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம் முதலியவை சமசுகிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்றும் கூறியுள்ளார். மேலும் செம்மொழிக்கான தகுதிகளாக வரையறை செய்யப்பட்டுள்ளவை எதுவும் தமிழுக்கு இல்லை என்றும், தொல்காப்பியம் நூல் சமசுகிருதத்திலிருந்து வந்தது என்றும், தமிழ் சமசுகிருதத்திலிருந்து கடன் பெற்றுதான் செம்மொழியாக வளர்ந்தது என்றெல்லாம் கூறியுள்ளார். இவர் செய்த மற்றொரு திரிபானது வேதங்களின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று இவரால் எழுதப்பட்ட ஆங்கில நூலாகும். அதற்கு இவர் எழுதிய விளக்கங்களையும், திரிபு வேலைகளையும் கண்டு தமிழ் அறிஞர்கள் அதிர்ச்சியடைந்து, கண்டனங்களை வெளியிட்டனர்.[7][8]
ஊழல் புகார்
இரா. நாகசாமி 1980களில் தமிழ்நாடு தொல்லியல் துறையில் பதவியில் இருந்தபோது ஊழல் புகாரில் சிக்கினார். இவர் மீதான ஊழல் புகாரில் இவருக்கு ஆதரவாக இருக்கும்படி காஞ்சி சங்கர மடத்திலிருந்து அதிகார வர்கத்துக்கு தொடர்ந்து அழுத்தங்கள் தரப்பட்டன. பின்னர் அந்த சிக்கலில் இருந்து மீண்டார் எனப்படுகிறது.[9]
உடல்நிலை குறைவு காரணமாக, 2022 சனவரி 23 அன்று சென்னையில் காலமானார்.[10]
படைப்புகள்
தமிழ்
மாமல்லை
ஓவியப்பவை
உத்தரமேரூர்
கலவை
கவின்மிகு சோழர் கலைகள்
ஆங்கிலம்
R. Nagaswamy (1980). Art and culture of Tamil Nadu. Sundeep Prakashan.
The sensuous and the sacred: Chola bronzes from South India. American Federation of Arts. 2002. ISBN978-0-295-98284-7. {{cite book}}: Unknown parameter |authors= ignored (help)
R. Nagaswamy (2003). Facets of South Indian Art and Architecture. Aryan Books International. ISBN978-81-7305-244-6.