எங்கள் வீட்டு மகாலட்சுமி
எங்கள் வீட்டு மகாலட்சுமி 1957-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுபராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் இசை மாஸ்டர் வேணு. இது சரத் சந்திர சாட்டர்ஜி வங்காள மொழியில் எழுதிய "நிக்சுருதி" என்ற புதினத்தின் தழுவலாகும். இதே திரைப்படம் தெலுங்கிலும் "தோடி கோடலு" (1957) என்ற பெயரில் ஒரே காலப்பகுதியில் வெளியிடப்பட்டு, தெலுங்குத் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது.[2] கதைஇந்த படம் ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சினைகள் மற்றும் நன்மைகள், ஆகியவற்றை சித்தரிக்கிறது. குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்க சிலர் எப்படி நிலைமையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள். எனினும், ஒற்றுமை என்பது குடும்பத்தின் உயிர் மூச்சாகும் என்பதையும் காடுகிறார்கள். வழக்கறிஞர் கணபதி (எஸ். வி. ரங்கராவ்), அவரது மனைவி அன்னபூர்ணா (கண்ணாம்பா) ஆகிய இருவரும் குடும்பத்தின் மூத்தவர்கள், அவரது சகோதரர் ரமணயா, அவரது மனைவி அனுசுயா ஆகியோர் ஒன்றாக ஒரு கிராமத்தில் வசிக்கின்றனர். கோபுவை (நாகேஸ்வரராவ்), இருவரும் தங்களுடைய உறவினர்களாகக் கருதுகின்றனர். அன்னபூர்ணா ஒரு தீவிர நோயாளியாக இருப்பதால் கோபுவின் மனைவி சுசீலா (சாவித்திரி) குடும்பத்தை கவனித்து வருகிறாள். அன்னபூர்ணா, சுசீலா ஆகியோரிடையே பொறாமையை ஏற்படுத்தி அனுசுயா அவர்களுக்கு இடையே பிளவை உருவாக்குகிறாள். இதனால் குடும்பத்தை விட்டு கோபுவும் அவனது மனைவியும் கிராமத்திற்கு செல்கின்றனர். கோபு விவசாயம் செய்து முன்னேறி வருகிறான், அரிசி ஆலையின் மேலாளர் வைகுந்தம் (எம். என். நம்பியார்) மற்றும் அவர்களின் தொலைதூர உறவினர் இருவரும் இக்குடும்பத்தின் மீது வீண் வதந்திகளை பரப்பி, ரமணையாவை மோசமாக சித்தரிக்க முயல்கிறார்கள். இது அனுசுயா மனந்திருந்த வழிவகுக்கிறது. கோபு குடும்பத்திற்காக போராட முடிவெடுத்து வைகுண்டத்தின் தீய செயல்களை கணபதியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார். பின்னர், சத்யம் மற்றும் சுசீலா ஆகிய இருவரும் கூட்டு குடும்பத்திற்கு திரும்பி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். நடிகர்கள்தமிழ்ப் பட நடிகர்கள்
தெலுங்குப் பட நடிகர்கள்
படக்குழு
ஒலித்தொகுப்புஇப்படத்தின் இசையமைப்பு மாஸ்டர் வேணு. அனைத்துப் பாடல்களும் பெரிய வெற்றியை பெற்றது. பாடல்களை உடுமலை நாராயணகவி, அ. மருதகாசி, கே. எஸ். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இயற்றியிருந்தனர். கே. ஏ. தங்கவேலு, கண்டசாலா, டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, ஜிக்கி, டி. வி. ரத்தினம், கே. ராணி ஆகியோர் பாடியிருந்தனர்.[3]
விருது
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia