கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்
பெயர்கன்னியாகுமரி மட்டி வாழை (மட்டி பழம்) என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு விலைமதிப்பற்ற பயிராகும்.[2] விளக்கம்கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் 2.5-3 செ.மீ. நீளமுடையது. இதன் உச்சி முதலையின் வாயைப் போன்றது. எனவே இதற்கு "முதலை விரல் வாழைப்பழம்" என்ற புனைபெயரும் உள்ளது.[3] நீளமாகவும், நேராகவும், சமமாகவும் வளரும் வழக்கமான வாழைப்பழக் குலைகளைப் போலல்லாமல், மட்டி வாழை சீப்பு ஒரு தனித்தன்மை வாய்ந்த தோற்றத்தைக் கொண்டுள்ளன.[4] மட்டி வாழைப்பழத்தில் குறைந்த அளவே சர்க்கரைச் சத்து உள்ளது. எனவே இது மற்ற வாழைப்பழங்களைப் போல், சளி பிரச்சனைகளை ஏற்படுத்தாது. எனவே இது குழந்தைகளுக்கு ஏற்றது.[5] வாழைப்பூ கிட்டத்தட்ட தரைக்கு இணையாக, 95° கோணத்தில் மரத்தில் தொங்கும் தன்மையுடையது. மட்டி வாழை சிகடோகா நோய்க்கு வலுவான எதிர்ப்பைக் கொண்டுள்ளன.[6] புவிசார் குறியீடுகன்னியாகுமரி மட்டி வாழைக்கு 31 சூலை 2023 அன்று இந்திய அரசினால் இந்திய புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இது 28 ஏப்ரல் 2030 வரை செல்லுபடியாகும்.[7][8] வீயனூரைச் சேர்ந்த கன்னியாகுமரி வாழை, தோட்டப்பயிர் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம், கன்னியாகுமரி மட்டி வாழையின் புவிசார் குறியீடு பதிவினை முன்மொழிந்தது. ஏப்ரல் 2021-இல் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த பிறகு, வாழைப்பழத்திற்கு 2023ஆம் ஆண்டில் சென்னை புவிசார் குறியீடு பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்டது. இது இப்பகுதியில் விளையும் வாழைப்பழங்களுக்குப் பிரத்தியேகமான "கன்னியாகுமரி மட்டி வாழை" என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. சிறுமலை மலை வாழைப்பழத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் மூன்றாவது வாழை வகையாகவும், புவிசார் குறியீடு பெற்ற தமிழ்நாட்டின் 59வது வகைப் பொருட்களாகவும் இது உள்ளது.[9] இதன் மூலம் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், சட்டவிரோத விற்பனை செய்வது, சந்தைப்படுத்துதலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதற்குச் சட்டப்பூர்வப் பாதுகாப்பையும் தனித்துவமான அடையாளத்தையும் புவிசார் குறியீடு வழங்குகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia