கம்பாலகொண்டா வனவிலங்கு சரணாலயம் (Kambalakonda Wildlife Sanctuary) விசாகப்பட்டினத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதியாகும். இது மார்ச் 10, 1970 முதல் ஆந்திர மாநில வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. முன்னதாக இந்நிலம் விஜயநகரம் மகாராஜாவின் கட்டுப்பாட்டிலிருந்தது. உள்ளூரில் உள்ள மலைப்பகுதியான கம்பாலகொண்டா என்ற பெயர் இதற்கு இடப்பட்டது. இது புதர் மற்றும் புல்வெளி கலந்த உலர்ந்த பசுமையான காடாகும், இது 70.70 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இக்காட்டில் காணப்படும் சுட்டிக்காட்டி இனமாக இந்தியச் சிறுத்தை உள்ளது.[1]
நிலவியல்
இந்த சரணாலயம் 17.34 ° N முதல் 17.47 ° N வரையிலா அட்சரேகையிலும், 83.04 ° E முதல் 83.20 ° E வரையிலான தீர்க்கரேகைகளிலும் அமைந்துள்ளது. இந்த இடம் தேசிய நெடுஞ்சாலை 16க்கு மேற்காகவும், விசாகப்பட்டினம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பெண்டுர்த்தியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியினை சாலைவழியாக அடையலாம்.
இந்த சரணாலயத்தில் உலந்த பசுமைமாற காடுகள் புல்வெளிகளுடன் கலந்து காணப்படுகிறது. நிலப்பரப்பு செங்குத்தான சரிவுகளுடன் மலைப்பாங்காகும்.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்
தாவரங்கள்
கிழக்குத் தொடர்ச்சி மலையைக் குறிக்கும் இந்த சரணாலயத்தில் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. மலர் பன்முகத்தன்மை அதிகமாகக் காணப்படுகிறது.
↑"Archived copy". Archived from the original on 23 September 2015. Retrieved 31 July 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)CS1 maint: archived copy as title (link)