கம்போங் காசிப்பிள்ளை
கம்போங் காசிப்பிள்ளை அல்லது காசிப்பிள்ளை கிராமம், (மலாய்: Kampung Kasipillay; ஆங்கிலம்: Kampung Kasipillay) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் (Federal Territory of Kuala Lumpur) சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் செந்தூல் பகுதியில் உள்ள புறநகரப் பகுதியாகும். கோலாலம்பூர் மாநகரத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் இந்த காசிப்பிள்ளை கிராமமும் ஒன்றாகும்.[1] கோலாலம்பூரின் மாநகரத்தின் வடக்கில், மாநகர மையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், செந்தூல், சிகாம்புட் ஆகிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. அத்துடன் பத்து மலைக்குச் செல்லும் வழியில் ஜாலான் ஈப்போ (Jalan Ipoh) சாலையின் கிள்ளான் ஆற்று பகுதியில் உள்ளது.[2] செந்தூல் நகர்ப் பகுதிக்குள், காசிப்பிள்ளை கிராமம் அமைந்து இருப்பதால் இங்கு இந்தியர்களின் நடமாட்டத்தை அதிகமாகக் காணலாம். காசிப்பிள்ளைகம்போங் காசிப்பிள்ளை எனும் பெயரில் கம்போங் (Kampung) எனும் சொல் மலாய் மொழியில் கிராமம் என்பதைக் குறிப்பிடுவதாகும். 1900-ஆம் ஆண்டுகளில் கோலாலம்பூரில், காசிப்பிள்ளை (Kasipillay) என்பவர் மிகவும் பிரபலமாக விளங்கியவர். தமிழர்ச் சமுதாயத்தின் தலைவராக மதிக்கப்பட்டவர். செல்வச் சிறப்புமிக்க 1900-ஆம் ஆண்டுகளில் கோலாலம்பூர் தமிழர்களின் தலைவராக இருந்தவர் என்றும் அறியப் படுகிறார். செந்தூல் வரலாறுமலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் செந்தூலும் ஒரு பகுதியாகும். செந்தூலில் அதிகமான அளவில் இந்து கோயில்களையும், தேவாலயங்களையும் காண முடியும்.[3] 1896-ஆம் ஆண்டு பிரித்தானியர்களால் மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது, இங்கு தமிழர்கள் அதிகமாக வந்து குடியேறினர். அதனால் தான் இங்கு தமிழர்களை அதிகமாகக் காண முடிகின்றது.[4] ஈப்போ சாலைஈப்போ சாலை எனும் ஜாலான் ஈப்போ (Jalan Ipoh) என்பது மலேசியாவின் கோலாலம்பூர் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாகும். கோலாலம்பூர் மாநகராட்சி, (Dewan Bandaraya Kuala Lumpur) 2014 நவம்பர் 26-ஆம் தேதி, ஜாலான் ஈப்போ எனும் பெயரை ஜாலான் சுல்தான் அசுலான் சா என மாற்றம் செய்தது. 1980-ஆம் ஆன்டுகளில், மலேசியாவின் மாமன்னர்களின் பெயர்களை கோலாலம்பூர் சாலைகளுக்குச் சூட்டுவது என கோலாலம்பூர் மாநகராட்சி முடிவு செய்தது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia