சிகாம்புட்
![]() சிகாம்புட், (மலாய்: Segambut; ஆங்கிலம்: Segambut; சீனம்: 泗岩布); என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சி கூட்டமைப்பில், அமைந்து உள்ள ஒரு முக்கிம்; ஒரு புறநகரம். அதே வேளையில் கோலாலம்பூர் கூட்டாட்சியின் துணை மாவட்டமும் ஆகும். மலேசியாவில் மக்கள் அதிகமாகவும்; நெருக்கமாகவும் வாழும் நகரங்களில் சிகாம்புட் நகரமும் ஒன்றாகும். சிகாம்புட் புறநகர்ப் பகுதி தனி ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. சிகாம்புட் புறநகர்ப்பகுதி1974-ஆம் ஆண்டுக்கு முன்பு சிகாம்புட் பகுதி பத்துமலை துணை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது கோலாலம்பூர் மாநகரம் சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சிகாம்புட் புறநகர்ப் பகுதியில் மாண்ட் கியாரா (Mont Kiara); ஸ்ரீ கியாரா (Sri Kiara) போன்ற உயர்தர மனைவீடுக் கட்டடங்கள் உள்ளன. தாமான் ஸ்ரீ சிகாம்புட் (Taman Sri Segambut); பண்டார் மஞ்சளாரா (Bandar Manjalara) போன்ற நடுத்தர மனைவீடுகள் உள்ளன. சிகாம்புட் டாலாம் (Segambut Dalam); கம்போங் சுங்கை பெஞ்சாலா (Kampung Sungai Penchala) போன்ற கிராமப்புற வீடுகளும் உள்ளன. அந்த வகையில் சிகாம்புட் தொகுதியில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.[1][2][3] நகரங்கள்சிகாம்புட் பகுதியில் பின்வரும் புறநகர்க் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.
அரசியல்சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மலேசியப் பொதுத் தேர்தல், 2004 வரை பாரிசான் நேசனல் கட்சியின் பாதுகாப்பான இடமாக கருதப்பட்டது. இருப்பினும், 2008; 2018; பொதுத் தேர்தல்களில் கெராக்கான் கட்சி வெற்றி பெற்றது. 2018-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், பாக்காத்தான் அரப்பான் - ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த அன்னா இயோ வெற்றி பெற்றார். மலேசியாவின் முதல் பெண் சபாநாயகர்சிகாம்புட்டின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பாக்காத்தான் அரப்பான் - ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த அன்னா இயோ (Hannah Yeoh). சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர்.[4] இவர் மலேசியாவின் முதல் பெண் சபாநாயகர். 34 வயதில் மலேசியாவின் வரலாற்றில் இளைய சபாநாயகரும் இவரே ஆவார். இவர் சிலாங்கூர், சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டுத் துறையின் துணை அமைச்சர்முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமதுவின், பாக்காத்தான் அரப்பான் நிர்வாகத்தின் கீழ், மலேசியாவின் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையின் துணை அமைச்சராகப் பணியாற்றியவர்.[5][6] இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். இவருடைய கணவரின் பெயர் ராமசந்திரன் முனியாண்டி. இரு பெண்பிள்ளைகள்; கயிலை, சாய் ஆதரா.[7] சிகாம்புட் புறநகர்ப் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்சிகாம்புட் புறநகர்ப் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 317 மாணவர்கள் பயில்கிறார்கள். 27 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia