கருமாரியம்மன்
கருமாரியம்மன் (Karumariamman) கருமாரி என்றும் அழைக்கப்படும் இவர், பெரியம்மை, ஆரோக்கியம், சிகிச்சைக்கான இந்து தெய்வம் ஆவார். இவர் இந்து தெய்வமான பார்வதியின் ஓர் அம்சமாகவும், மாரியம்மன், ரேணுகா தெய்வத்தின் மற்றொரு வடிவமாகவும் உள்ளார். இவர் முதன்மையாக தென்னிந்தியாவின் கிராமங்களில் வழிபடப்படுகிறார். உதாரணமாக திருவேற்காடு இவருடைய வசிப்பிடமாக நம்பப்படுகிறது. கருமாரியம்மன் பொதுவாக தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்துக்களாலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆப்பிரிக்கா, ஆத்திரேலியாவைச் சேர்ந்த இந்துக்களாலும் வழிபடப்படுகிறார். சில இந்துக்கள் பங்குனி, ஆடித் திருவிழா, நவராத்திரி பண்டிகைகளை கருமாரியம்மனைக் கௌரவிக்கும் வகையில் கொண்டாடுகிறார்கள். மேலும் இந்தப் பண்டிகைகளை இவரைக் கௌரவிக்கும் வகையில் கொண்டாடுவதன் மூலம் உடல்நலப் பிரச்சினைகள் குறைவதோடு, உடல்நலக் கோளாறுகளுக்குச் சிகிச்சையும் கிடைக்கும் என்றும், பெரியம்மை நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஆகம வழிபாட்டில், பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியாசக்தி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வெளிப்பாடாக கருமாரியம்மன் வழிபடப்படுகிறார். தென்னிந்தியாவில் தேவர், அகமுடையார் சாதியினரால் கருமாரியம்மன் முக்கியமாக வழிபடப்படுகிறார். இவர்கள் கருமாரியம்மனை தங்கள் குடும்ப தெய்வமாகவும், முதன்மை தெய்வமாகவும், தங்கள் குல தெய்வமாகவும் கருதுகின்றனர். உருவவியல்கருமாரியம்மன் பொதுவாக நீள்வட்ட வடிவ முகத்துடன், நீளமான நகைகள், பெரிய மலர் மாலையுடன் சிவப்பு நிற ஆடை அணிந்த ஓர் அழகான இளம் பெண்ணாகச் சித்தரிக்கப்படுகிறார். மேலும் நான்கு கைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். இத்தெய்வத்தின் தலைக்குப் பின்னால் நெருப்புச் சுடர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இது சூரிய கடவுள் தெய்வத்தை மதிக்கிறார் என்பதைக் குறிக்கிறது. கருமாரியம்மன் பொதுவாக உட்கார்ந்த நிலையில் சித்தரிக்கப்படுகிறார், பெரும்பாலும் வலது கையில் கத்தியையும் இடது கையில் குங்குமக் கிண்ணத்தையும் வைத்திருப்பார். மற்ற இரண்டு கைகளும் இடதுபுறத்தில் திரிசூலத்தையும் (திரிசூலம்) வலதுபுறத்தில் உடுக்கையினையும் பிடித்துள்ளன. புராணக்கதைபுராணத்தின் படி, கருமாரியம்மன் ஒரு முறை ஒரு ஜோதிடராக மாறுவேடமிட்டு, சூரியக் கடவுளான சூரியனைச் சந்தித்து அவரது எதிர்காலத்தைக் கணித்தார். சூரியன் கருமாரியம்மனைப் புறக்கணித்து, அவருக்குக் காட்சியளிக்க மறுத்துவிட்டான். கோபமடைந்த தேவி அங்கிருந்து சென்றுவிட்டாள். கருமாரியம்மன் தனது இருப்பிடத்தை விட்டு வெளியேறிய தருணத்தில், சூரியன் தனது பிரகாசத்தை இழக்கத் தொடங்கினார். விரைவில் அவர் ஒரு பெரிய நிலக்கரியாக மாற்றப்பட்டார், இதனால் பூமி இருளில் மூழ்கி, பிரபஞ்சத்தில் குழப்பம் நிலவியது. சூரியன் தனது தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். கருமாரியம்மனை சமாதானப்படுத்த, வருடத்திற்கு இரண்டு முறை அவள் கால்களைத் தொட்டு வணங்குவதாகச் சூரியன் உறுதியளித்தான். கருமாரியம்மன் சூரியனை ஆசீர்வதித்தார், அவர் இழந்த பிரகாசத்தை மீண்டும் பெற்றார். இன்று, சூரியக் கதிர்கள் திருவேற்காட்டில் உள்ள கருமாரியம்மனின் பாதங்களில் நேரடியாக விழுகின்றன. இந்த நிகழ்வு தமிழ் நாட்காட்டி மாதங்களில் பங்குனி (மார்ச் - ஏப்ரல்), புரட்டாசி (செப்டம்பர் - அக்டோபர்) மாதங்களில் நிகழ்கிறது.[2] கோவில்கள்இந்தியா
இந்தியாவிற்கு வெளியேஇந்தோனேசியா
மலேசியா
சிங்கப்பூர்
இலங்கை
ஆப்பிரிக்கா
கனடா
படங்கள்
மேலும் காண்கமேற்கோள்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia