கர்ப்ப உபநிடதம்
கர்ப்ப உபநிடதம் (Garbha Upanishad) [3] ), அல்லது கர்போபநிடதம் ( Garbhopaniṣad ) என்பது சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். இது 108 இந்து உபநிடத நூல்களின் நவீன தொகுப்பில் 17-வது இடத்தில் உள்ளது. சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இதை சில அறிஞர்கள் யசுர்வேதத்துடன் தொடர்புடையது என்றும்[1]பிறர் அதர்வண வேதத்துடன் தொடர்புடையது என்றும் கூறுகின்றனர்.[2] இது 35 சாமான்ய (பொது) உபநிடதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[4] உபநிடதத்தின் கடைசி வசனம் பிப்பலாத முனிவருக்கு உரையைக் காணிக்கையாக்குகிறது. ஆனால் உரையின் காலவரிசை மற்றும் ஆசிரியர் பற்றி தெளிவில்லை. மேலும் எஞ்சியிருக்கும் கையெழுத்துப் பிரதிகள் சேதமடைந்துள்ளன. ஒன்றுக்கொன்று பொருந்தாதவை மற்றும் முழுமையற்றவையாக இருக்கின்றன. [5] ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியவியலாளர் பால் தியூசென் போன்ற பலரும் "உடலியல் அல்லது மருத்துவம் பற்றிய கையேடு" என்கின்றனர். [3] மனித வாழ்க்கையின் கரு முதல் வயதுவந்த நிலை வரை மனித உடற்கூறியல் தொடர்பான ஒப்பீட்டு அளவைக் கணக்கிடுவதற்கும் வழங்குவதற்கும் இது குறிப்பிடத்தக்கது. [6][7] மேலும், மனித உடல் என்றால் என்ன?,[8][9] மனித கரு எவ்வாறு உருவாகிறது?,[10] [11][7] கரு எவ்வாறு உருவாகிறது?,[9][12] கருவுக்கு என்ன தெரியும்?,[11][13]கர்ப்பத்தில் கரு எவ்வாறு கற்றுக்கொள்கிறது?,[14] பிறப்புக்குப் பிறகான வளர்ச்சி[15] என்பதைப் பற்றியெல்லாம் பேசுகிறது. சொற்பிறப்பியல்கர்ப்பம் என்ற வார்த்தையின் அர்த்தம் "கருப்பை" தொடர்பானது.[16] கையெழுத்துப் பிரதிகள்எஞ்சியிருக்கும் கையெழுத்துப் பிரதிகள் முழுமையடையாமல் காணப்படுகின்றனர். பெரும்பாலான வாசகங்கள் தொலைந்துவிட்டன அல்லது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் கிடைத்த கையெழுத்துப் பிரதிகளும் சீரற்றதாக உள்ளது. [7] ஒரு அத்தியாயத்தில் நான்கு உரைநடைப் பகுதிகளைக் கொண்ட கொல்கத்தா கையெழுத்துப் பிரதி மிகவும் ஆய்வு செய்யப்பட்ட பதிப்பாகும். [7] [11] சான்றுகள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia