கல்பனா ராகவேந்தர்
கல்பனா ராகவேந்திரா, (Kalpana Raghavendar) ஓர் இந்தியப் பின்னணிப் பாடகியாவார். இவர் திரைப்படங்களில் நடிகைகளுக்காக குரல் கொடுத்துள்ளார். இவர் தனது ஐந்தாவது வயதில் இருந்து பாடத் தொடங்கினார். இதுவரையிலும் கிட்டத்தட்ட 1,500 பாடல்களைப் பாடியுள்ளார். கிட்டத்தட்ட 3,000 மேடைகளில் பாடியுள்ளார்.[1] ஏஷ்யாநெட் மலையாளத் தொலைக்காட்சி வழங்கிய ஸ்டார் சிங்கர் என்ற பாட்டுப் போட்டியின் ஐந்தாவது பருவத்தில் வெற்றி பெற்றார்.[2][3] ஆரம்பகால வாழ்க்கைகல்பனா ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை, டி. எஸ். இராகவேந்திரா ஒரு புகழ்பெற்ற பின்னணிப் பாடகரும், நடிகரும் இசையமைப்பாளருமாவார். தாயார் சுலோச்சனா ஒரு பாடகியாவார்.[1] கல்பனாவின் இளைய தங்கை பிரசன்னாவும் இசை, நாடகப் பாடகியாவார்.[4] கல்பனா கருநாடக இசையை மதுரை டி. சீனிவாசனிடம் கற்றார்.[5] தொழில் வாழ்க்கைகல்பனா தனது ஐந்து வயதில் இசை வாழ்க்கையைத் தொடங்கினார். ஆறு வயதில் புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.[6] இவரது முதற் பாடல், பி. சுசீலா, மனோ, எம். எம். ஸ்ரீலேகா, இவருடைய தங்கை பிரசன்னா ஆகியோருடன் பாடிய ஒரு குடும்பப் பாடலாகும். இப்பாடலுக்கு இசையமைப்பாளர் சலூரி வாசுராவ் இசையமைத்திருந்தார்.[7] 1999 இல் மணிசர்மா இசையமைத்த மனோகரம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் "மங்களகௌரிகி" என்ற பாடலுடன் ஒரு முழுமையான பின்னணிப் பாடகியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், கே. வி. மகாதேவன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா போன்ற பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுடனும், பாடகர்களுடனும் பணியாற்றியுள்ளார். இவர் ஒரு பின்னணிப் பாடகியாக அல்லாமல் ஒரு மேடைப் பாடகியாக பொதுமக்களுக்கு நன்கு தெரிந்தவர். உலகளவில் ஏறத்தாழ 3,000 மேடை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.[1][8] 2013 இல், தனது குரு மதுரை டி. சீனிவாசனுக்கான அஞ்சலி நிகழ்ச்சியில் முன்னணிப் பாடகியாக இருந்தார்.[5] இவர் பாடிய பாடல்களில் சில
நடிகையாக
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia