காந்திலால் பூரியாச
காந்திலால் பூரியா (Kantilal Bhuria) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் ஜூலை 2011 ஆம் ஆண்டு சூலை மாதம் வரை இந்திய குடியரசின் பழங்குடியினர் விவகார அமைச்சராக இருந்தார். 2009 ஆம் ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -2 அரசாங்கத்தில் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக பதவி உயர்வு பெற்றார்.[1] முன்னதாக, இவர் வேளாண் அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் இருந்தார்.[2] இவருக்குப் பிறகு, மற்றொரு காங்கிரசுகாரர் வி கிசோர் சந்திர தியோ புதிய பழங்குடியினர் விவகார அமைச்சர் பொறுப்பு வகித்தார். ![]() அரசியல் வாழ்க்கைபூரியா 1998, 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இயபுவா தொகுதியிலிருந்தும், 2009 ஆம் ஆண்டில் இரத்லம் தொகுதியிலிருந்தும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரத்லம் தொகுதியில் தோல்வியடைந்தார். ஆனால் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் தோல்வியடைந்தார், ஆனால் 2019 ஆம் ஆண்டு இயபுவா சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மத்தியப் பிரதேச சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia