மத்திய பாரதம்
மத்திய பாரதம் (Madhya Bharat, also known as Malwa Union)[1]1947-இல் இந்திய விடுதலைக்கு பின்னர் இது பிரித்தானிய இந்தியாவின் மத்திய இந்திய முகமையில் இருந்த 25 சுதேச சமஸ்தானங்களை இணைத்து 28 மே 1948 அன்று நிறுவப்பட்ட இந்தியாவின் ஒரு ஆட்சிப் பகுதியாகும்[2][3] மத்திய பாரதம் 46,478 சதுர மைல்கள் (120,380 km2) பரப்பளவு கொண்டிருந்தது.[4] இதன் குளிர்கால தலைநகரமாக குவாலியர் நகரம் மற்றும் கோடைக்கால தலைநகரமாக இந்தூர் நகரம் இருந்தது. இதன் தென்மேற்கில் பம்பாய் மாகாணம் (தற்கால குஜராத் & மகாராட்டிரா), வடமேற்கில் இராஜஸ்தான், வடக்கில் உத்தரப் பிரதேசம், கிழக்கில் விந்தியப் பிரதேசம் மற்றும் போபால் இராச்சியம் (1949–56), தென்கிழக்கில் மத்தியப் பிரதேசம் எல்லைகளாக இருந்தது. மத்திய பாரதப் பகுதி மக்களில் இந்தி மொழி பேசும் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தனர். 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, மத்தியப் பாரதப் பகுதிகளுடன், விந்தியப் பிரதேசம் ஆகியவைகள் புதிய மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மத்திய பாரத மாவட்டங்கள்1 நவம்பர் 1956-ஆம் தேதிக்கு முன்னர் மத்திய பாரதத்தில் 16 மாவட்டங்கள் இருந்தது.
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia