கிரமவித்தன் (கதைமாந்தர்)
கிரமவித்தன் அல்லது ரேவதாச கிரமவித்தன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருவராவார். மேலும் பழுவூர் இளயராணி நந்தினி தேவியின் துணையுடன் வீரபாண்டியனின் மரணத்திற்காக சுந்தர சோழரின் குடும்பத்தைப் பழிவாங்க முயற்சிக்கும் நபராக வருகிறார். கதாப்பாத்திரத்தின் இயல்புகிரமவித்தன் பொன்னியன் செல்வன் புதினத்தின் ஐந்தாம் பாகத்தில் அறிமுகமாகிறான். இவனது மகள் ராக்கம்மாள் நாகப்பட்டினம் புத்த விஹாரத்திலிருந்து வெளிப்பட்ட பொன்னியின் செல்வனைக் கொல்லும் பணி ரவிதாசனால் இவனுக்கு அளிக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் ஏறிச்செல்லவிருக்கும் யானையின் உண்மைப் பாகனைக் கடத்திச் சென்று கட்டிப்போட்டு விட்டு விஷம் தடவிய அங்குசத்துடன் யானைப்பாகனைப் போல் கிரமவித்தன் யானையிடம் செல்கிறான். ஆனால் இவனது துர்நோக்கைப் புரிந்துகொண்ட யானை அருகில் சென்றதும் இவனைத் தூக்கி எறிந்து விடுகிறது. பொன்னியின் செல்வனைக் கொல்வதற்கு ரவிதாசன் தீட்டிய திட்டம் நிறைவேறாமல் போனது. நூல்கள்ரேவதாச கிரமவித்தனைக் கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள். இவற்றையும் பார்க்கவும்
|
Portal di Ensiklopedia Dunia