கிருபானந்த வாரியார்
திருமுருக கிருபானந்த வாரியார் (25 ஆகத்து 1906 - 7 நவம்பர் 1993) சிறந்த முருக பக்தர் ஆவார். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.2021 ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.[1] வாழ்க்கைக் குறிப்புஇவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ்நாட்டின் இன்றைய வேலூர் மாவட்டம் உள்ள காட்டுப்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் 25 ஆகத்து 1906 அன்று மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகனாக பிறந்தார். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில், பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியைத் தனது 19-ஆவது வயதில் கல்யாணம் புரிந்தார். இயல், இசைக் கல்விஇவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். சொற்பொழிவு ஆற்றல்தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும்புலமை பெற்றவர். அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். திருப்புகழ் அமிர்தம்சுவாமிகள் 1936 ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி' என்று தொடங்கும் திருப்புகழுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது. சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர்த் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின. எழுதிய நூல்கள்வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-இக்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன. குழந்தைகளுக்கு, "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார். ![]() விருதுகளும், சிறப்புகளும்
மறைவுஆன்மீகச் சொற்பொழிவுகளுக்காக 19 அக்டோபர் 1993 அன்று ஐக்கிய அரசகத் தலைநகர் இலண்டனுக்குப் பயணமான வாரியார், அதன்பின் உடல்நலக் குறைவால் தாயகம் திரும்ப எண்ணி நவம்பர் 7 அன்று விடியற்காலையில் வானூர்தி வழியே மகாராட்டிரத் தலைநகர் பம்பாயை (தற்போது மும்பை) அடைந்தார். அங்கிருந்து மதராசு மாநகரை (தற்போது சென்னை) அடைய மற்றொரு வானூர்தியில் ஏறினார். அப் பயண முடிவுக்கு முன் ஒரு கட்டத்தில் தமக்கு அருகிலிருந்த அன்பர் ஒருவரிடம் "திருப்பதியைத் தாண்டிவிட்டோமா?" என்று வினவினார். அவர் "ஆமாம் சாமி" என்றதும் “அடுத்தது திருத்தணிதானே?” என்று வினவிய சிறிது நேரத்தில் முருகன் பெயரைச் சொல்லியவாறே இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு 87 அகவை நிரம்பியிருந்தது. அவர் பயணித்த வானூர்தி மதராசு வானூர்தி நிலையம் வந்தடைந்ததும் அவரது உடல் காங்கேயநல்லூருக்குக் கொண்டுசெல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.[3] 2000-ஆம் ஆண்டில், சரவண பவன் நிறுவனர் பி. இராஜகோபால் , வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் என்ற பெயரில் ஒரு கோவிலை, காங்கேயநல்லூரில் நிறுவினார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia