கிரேட்டா தூன்பர்க்
கிரேட்டா தூன்பர்க் (Greta Thunberg; சுவீடிய மொழி: [ˈɡrêːta ˈtʉ̂ːnbærj] (ⓘ); பிறப்பு: 3 சனவரி 2003) சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உலகின் பருவநிலை காக்க போராடும் 15 வயதேயான பெண் ஆவார். போராட்டம் ஆரம்பம்சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் துவங்கிய பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம் (School strike for the climate) என்ற இயக்கம் உலக பிரசித்தி பெற்றுள்ளது. இதன் மூலம் உலகில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பலர் இவருடன் சேர்ந்து போராடிவருகிறார்கள். இவர் ஆட்டிசத்தின் ஒரு வகையான அசுபெர்கர் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாலும் உலகில் உணவுப்பழக்கபழக்கத்தினாலும் உலகம் சூடாகிறது என்று கூறி சைவ உணவை உண்பது விமான பயணத்தை தவிர்ப்பது என பல வகையிலும் புவி வெப்பமாவதைத்தடுக்க போராடிவருகிறார்.[1] ஆகஸ்டு 2018இல், ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அவருடைய தனிப்பட்ட ஈடுபாடு தொடங்கியது. ஸ்வீடன் பாராளுமன்றத்திற்கு எதிரில் சுற்றுச்சூழல் பாதிப்பினை எதிர்த்து, தன் பள்ளி நாள்களை, போராட்டம் மூலம் தொடங்கினார். பருவநிலையைக்காக்க பள்ளிப்போராட்டம் (School strike for the climate) என்ற பதாகையுடன், எதிர்காலத்திற்கான வெள்ளி என்ற பெயருடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் மூலம் உலகில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பலர் இவருடன் சேர்ந்து போராடிவருகிறார்கள். தொடர்ந்து பிற மாணவர்கள் பலர் அவருடன் சேர்ந்துகொண்டனர். 2018இல் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற மாநாட்டில், பள்ளியில் போராட்டம் ஆரம்பமானதற்கான காரணங்களைக் குறிப்பிட்டுப் பேச ஆரம்பித்தார். தொடர்ந்து உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் போராட்டம் தொடர ஆரம்பித்தது. 2019இல் பல நாடுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட போராட்டங்கள் தொடர்ந்தன.[2][3] எதிர்காலத்துக்காக வெள்ளி2018இல், தன்னுடைய 15ஆம் வயதில் ஸ்வீடன் பாராளுமன்றத்திற்கு முன்பாக ஒரு சிறிய பதாகையுடன் போராட்டத்தைத் தொடங்கிய கிரேட்டா தன்பர்க் அதனைத் தொடர்கிறார். சுற்றுச்சூழல் தொடர்பான அப்பிரச்னையை முன்னெடுத்தபோது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னாள்களில் வெள்ளிக்கிழமைதோறும் தன் பள்ளி வகுப்பினைப் புறக்கணித்து ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்த ஆரம்பித்தார். இதையடுத்து, ‘எதிர்காலத்துக்காக வெள்ளி' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். (#fridaysforfuture) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமாக்கினார். இதன் மூலம் உலக மக்களின் கவனம் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து பல நகரங்களுக்கும் சென்று பொதுமக்களையும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களையும் சந்தித்து பருவ நிலை தொடர்பான விழிப்புணர்வினைத் தொடர்ந்து மேற்கொள்ள ஆரம்பித்தார்.[4] இயற்கையைக் காக்க தன்னுடைய பள்ளிப்படிப்பைத் துறந்த தன்பர்க், தன் கோரிக்கையின் மூலமாக மிகவும் பிரபலமாகி வருகிறார்.[5] கார்டியன் இதழுக்கு 11 மார்ச் 2019இல் அளித்த பேட்டியில், “நான் சற்று அதிகமாக நினைக்கிறேன். சிலர் அப்படியே விட்டுவிடுவர். எனக்கு வருத்தம் தருவதையோ, சோகம் தருவதையோ அப்படியே விட்டுவிட முடியவில்லை. பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் சிறியவளாக இருக்கும்போது எங்களுடைய ஆசிரியர்கள் எங்களிடம் திரைப்படங்களைப் போட்டுக் காண்பிப்பர். அப்போது கடலில் பிளாஸ்டிக் மிதப்பதையோ, பசியோடு இருக்கின்ற போலார் கரடிகளையோ பார்க்கும்போது முழுதும் அழுதுகொண்டேயிருப்பேன். என் நண்பர்களோ படத்தைப் பார்க்கும்போது மட்டுமே வருத்தப்படுவர், படம் முடிந்ததும் மற்றவற்றைப் பற்றி நினைக்க ஆரம்பிப்பர். என்னால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அந்தப் படங்கள் அனைத்தும் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.” [6] டெட் மாநாடுமுதல் தர நுட்பவியலாளர்கள், அறிவியலாளர்கள், சமூகச் சேவையாளர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டு 20 நிமிடத்துக்குள் முக்கிய கருத்துக்களைப் பற்றி விவாதிக்கின்ற டெட் மாநாடு ஸ்டாக்ஹோமில் ஒவ்வோராண்டும் நடைபெறும். 24 நவம்பர் 2018இல் நடைபெற்ற அம்மாநாட்டில் பேசும்போது அவர், பருவநிலை மாற்றம் பற்றி முதன்முதலாக தன் எட்டு வயதில் கேள்விப்பட்டதாகவும், அதற்கு முக்கியத்துவம் தராப்படாததற்குக் காரணம் புரியவில்லை என்றும், தன்னுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தாவிட்டால் தான் இறந்துகொண்டிருப்பதாக உணர்வதாகவும் கூறினார். “2018வாக்கிலேயே நீங்கள் ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தன் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் என்னை நோக்கிக் கேட்பர்” என்ற தன்பர்க், உரையின் நிறைவாக “விதிமுறைகளுடன் விளையாடிக்கொண்டு நாம் உலகை மாற்றமுடியாது. ஏனென்றால் விதிகள் மாற்றப்படவேண்டும்” என்றார்.[7] விருதுகள்உலகளவில் பிரபலமான நிலையில் அனைவருடைய கவனமும் அவரை நோக்கித் திரும்பியது.[8] மே 2019இல் டைம் இதழின் அட்டைப்படத்தில், அடுத்த தலைமுறைக்கான தலைவர் என்ற குறிப்போடு இடம்பெற்றார். அவரை பலர் முன்மாதிரியாகக் கொள்கின்றனர்.[9] அவ்விதழ் அவரை "உலகின் நபர் 2019" என தேர்ந்தெடுத்தது.[10] அவருடைய பள்ளிப் போராட்டத்தைப் பற்றிய 30 நிமிட குறும்படம் பற்றிய செய்தி வைஸ் என்ற இதழில் வெளியானது.[11] கிரேட்டா தன்பெர்க் ‘வாழ்வாதார உரிமை விருது’-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார் .[12]. டைம்ஸ் பத்திரிக்கையின் "உலகின் நபர் 2019" என தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] பல ஊடகங்கள் அவருடைய தாக்கத்தினை கிரேட்டா தன்பர்க் விளைவு என்று கூறுகின்றன.[13] தன்பர்க் பல விருதுகளைப்பெற்றுள்ளார். மிகப்பிரபலமான நூறு பேரில் கிரேட்டா தன்பர்க் ஒருவர் என்று டைம் இதழ் புகழாரம் சூட்டியுள்ளது. செப்டம்பர் 2019இல் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொண்டார். ஒரு முன்னுதாரணம்இவர் ஆட்டிசத்தின் ஒரு வகையான அசுபெர்கர் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாலும் உலகில் உணவுப்பழக்கபழக்கத்தினாலும் உலகம் சூடாகிறது என்று கூறி சைவ உணவை உண்பது விமான பயணத்தை தவிர்ப்பது என பல வகையிலும் புவி வெப்பமாவதைத்தடுக்க போராடிவருகிறார்.[1] சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தன் பழக்கவழக்கங்களை இவ்வாறாகக் கடைபிடித்து, ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia