குரும்பலூர்
குரும்பலூர் (ஆங்கிலம்:Kurumbalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். குரும்பலூர் பேரூராட்சி, ஈச்சம்பட்டி, மேட்டாங்காடு, மூலக்காடு, திருப்பெயர், புதூர், மற்றும் பாளையம் எனும் கிராமங்களை உள்ளடக்கியது. அமைவிடம்பெரம்பலூர் - துறையூர் தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் குரும்பலூர் பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 35 கி.மீ. தொலைவில் உள்ள அரியலூரில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு17.60 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3600 வீடுகளும், 12420 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6] வெளி இணைப்புகள்ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia