சங்ககால தமிழகத்தில் வேந்தர், வேளிர்களை அடுத்து நிலையில் குறுநில மன்னர்கள் இருந்தனர். இக்குறுநில மன்னர்கள் வேந்தர்கள் ஆட்சிக்கு உட்பட்டு அவர்களுக்கு வரி செலுத்துபவராகவும், அவர்கள் அரசியலில் தாமும் பங்கேற்று, போர்காலங்களில் வேந்தர்களுக்கு படைத்தலைவராகவும் இருந்தனர். இனக்குழுவின் பொதுப் பெயரால் சுட்டப்படும் குடிகள் பல இருந்தனர். அவர்கள் எயினர், , கங்கர், கட்டியர், கள்ளர், குறவர், கோசர், தொண்டையர், அருவாளர், பாணர், பொதுவர், மழவர்.[1]