கே. ஜி. அம்பெகோகார்கே. ஜி. அம்பெகோகார் என்பவா் 1957 ஜனவரி 14 முதல் 1957 பிப்ரவரி 28 ஆம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஐந்தாவது ஆளுநராக இருந்தாா். இவர் இந்திய குடிமைப் பணி உறுப்பினராகவும் இருந்தார் மற்றும் ஆர்.பி.ஐ. துணை ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன் நிதி செயலாளராக பணியாற்றினார். பி. ராமா ராவ் பதவி விலகும்போது இவர் ஆளுநராக பதவியேற்றார். இவரது பதவி காலமானது, பி.என். அடர்கர் (42) மற்றும் அமிதாவ் கோஷ் (20) ஆகியோரின் வாாிசையில் மூன்றவாது குறுகிய காலமாக 45 நாட்கள் மட்டுமே இருந்தாா்.[1] கடைசி இரண்டு ஆளுநா்களோடு ஒப்பிடுகையில் அம்பெகோகார் உடைய கையொப்பம் எந்த இந்திய நோட்டுகளிலும் இடம் பெறவில்லை. ஆனால் சுதந்திர அடைந்தபின் நிதி செயலாளராக ஆன பின் வெளியான இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்கவது வெளியிடப்பட்ட குறிப்பிட்ட சில நோட்டுகளில் அவருடைய கையொப்பம் இருந்தது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia