கொடைக்கானல் மலைப்பூண்டு
புவிசார் குறியீடு பட்டியலின் கீழ் புவிசார் குறியீட்டின் படி இது "கொடைக்கானல் மலைப்பூண்டு" என்று குறிப்பிடப்படுகிறது.[1] பெயர்கொடைக்கானல் மலைப்பூண்டின் பிறப்பிடமான கொடைக்கானல் பகுதியின் பெயரால் அழைக்கப்படுகிறது. விளக்கம்கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோடை வாழிடமாகும். கொடைக்கானல் மலைப்பூண்டு விவசாயம், மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.[2] இதன் தாவரவியல் பெயர் அல்லியம் சட்டைவம் (Allium sativum) என்பதாகும். இம்மலைப் பகுதியில் 6 மாதத்துக்கு ஒருமுறை மட்டும் விளையும் தன்மையுடைய இந்தப் பூண்டு வெள்ளை நிறத்தில் இல்லாமல் சற்று சாம்பல் நிறத்தில் காணப்படும். காரத்தன்மையுடன் கூடிய இந்த மலைப்பூண்டு மருத்துவகுணம் நிறைந்தது. இந்த குறிப்பிட்ட பூண்டு மருத்துவ பண்புகளுக்காகவும் இதில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்ணுயிர் எதிர்ப்பு திறன்களுக்காகவும் அறியப்படுகிறது. பிற பூண்டு வகைகளுடன் ஒப்பிடும்போது இதில் அதிகமாக கரிம கந்தக கலவைகள், பீனால்கள், பிளாவனாய்டுகள் உள்ளன.[3] புவியியல் குறியீடுகொடைக்கானல் மலைப்பூண்டிற்கு இந்திய அரசின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேட்டில் புவிசார் குறியீடு தகுதி சூலை 30, 2019அன்று வழங்கப்பட்டது. இத்தகுதி 31 மே 2028 வரை செல்லுபடியாகும்.[1] புவிசார் குறியீட்டு பதிவால் வழங்கப்படும் மதிப்புமிக்க புவியியல் அடையாளம், ஒரு தயாரிப்பு தனித்துவமான குணங்களைக் கொண்டுள்ளது, பாரம்பரிய உற்பத்தி முறைகளைப் பின்பற்றுகிறது, அதன் புவியியல் தோற்றத்தில் வேரூன்றிய நற்பெயரைப் பெற்றுள்ளது என்பதைச் சான்றளிக்கிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia