கௌசிதகி உபநிடதம்
கௌசிதகி உபநிடதம் (Kaushitaki Upanishad) என்பது இருக்கு வேதத்தில் உள்ள ஒரு பழங்கால சமசுகிருத நூலாகும்.[1] இது கௌசிதகி பள்ளியுடன் தொடர்புடையது. ஆனால் ஒரு சாமான்ய உபநிடதம். அதாவது வேதாந்தத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் இது "பொதுவானது". இது இந்தியாவில் பிறந்த அமெரிக்க எழுத்தாளரும், பேராசிரியருமான இராபர்ட் கியூம் மொழிபெயர்த்த 13 முதன்மை உபநிடதங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.[2] மேலும் 108 உபநிடதங்களின் முக்திகா நியதியில் எண் 25 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. கௌசிதகி பிராமண உபநிடதம் என்றும் அழைக்கப்படும் இது, கௌசிதகி ஆரண்யகத்தின் அல்லது சங்கயான ஆரண்யகத்தின் ஒரு பகுதியாகும். கௌசிதகி ஆரண்யகம் 15 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. மேலும், நான்கு அத்தியாயங்கள் கௌசிதகி உபநிடதத்தை உருவாக்குகின்றன. காலவரிசைமற்ற உபநிடதங்களைப் போலவே இந்த உபநிடதத்தின் காலவரிசையும் தெளிவாக இல்லை. இது தொல்பொருள், நடை மற்றும் உரைகள் முழுவதும் திரும்பத் திரும்பக் கூறுதல் ஆகியவற்றின் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கருத்துக்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய அனுமானங்கள் மற்றும் பிற இந்தியத் தத்துவங்களில் எந்தத் தத்துவம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது பற்றிய அனுமானங்களால் இயக்கப்படுகிறது.[3][4] இந்த உபநிடதம் கிமு 1 ஆம் மில்லினியத்தின் நடுப்பகுதிக்கு முன்னர் இயற்றப்பட்டிருக்கலாம். இரனடே[5] ஆத்ரேய மற்றும் தைத்திரிய உபநிடதங்களின் காலத்தைப் பற்றி இயற்றப்பட்ட பண்டைய உபநிடதங்களின் மூன்றாவது குழுவில் கௌசிதகி காலவரிசை அமைப்பை வைக்கிறார். கௌசிதகி உபநிடதம் பிருகதாரண்யகம், சந்தோக்யம் மற்றும் தைத்திரீய உபநிடதங்களுக்குப் பிறகு இயற்றப்பட்டிருக்கலாம். ஆனால் இந்து மதத்தின் மற்ற அனைத்து பண்டைய முதன்மை உபநிடதங்களுக்கு முன்பும் இயற்றப்பட்டிருக்கலாம் என்று எசுப்பானிய மொழிபெயர்ப்பாளர் யுவான் மசுகாரோ கூறுகிறார்.[6] இந்தியவியலாளர் பால் துசென் மற்றும் வின்டெர்மிட்சு ஆகியோர் கௌசிதகி உபநிடதத்தை மிகவும் பழமையான உரைநடை பாணி உபநிடதங்கள் மற்றும் பௌத்தத்திற்கு முந்தைய, சைனத்திற்கு முந்தைய இலக்கியங்களில் ஒன்றாக கருதுகின்றனர்..[7][8] கௌசிதகி உபநிடதத்தை கிமு 800 என்று இயன் வீச்சர் குறிப்பிடுகிறார். [9] 1998 ஆம் ஆண்டு பேட்ரிக் ஆலிவெல்லே மற்றும் பிற அறிஞர்களின் மதிப்பாய்வின்படி, கௌசிதகி உபநிடதம் பௌத்தத்திற்கு முந்தைய காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம், ஆனால் மிகவும் பழமையான பிருஹதாரண்யகா மற்றும் சாந்தோக்ய உபநிடதங்களுக்குப் பிறகு, கிமு 6 முதல் 5 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கௌஷிதகி உரையை இடுகிறது. [10] [11] உள்ளடக்கம்கௌசிதகி உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தில், ஆத்மாவின் (சுய) மறுபிறப்பு , அதன் இடமாற்றம் பற்றியும், ஒருவரின் வாழ்க்கை கர்மாவால் பாதிக்கப்படுகிறது என்றும் வலியுறுத்திகிறது. பின்னர் அது பிறப்பு மற்றும் மறுபிறப்பு சுழற்சிகளிலிருந்து விடுதலையும் சுதந்திரமும் அடைகிறதா என்றும் கேட்கிறது. அத்தியாயம் 1 இன் 6 ஆம் வசனத்தில், கௌசிதகி உபநிஷத் ஒரு மனிதன் பருவம் (இயற்கை), பருவத்தில் இருந்து துளிர்க்கிறது, தொட்டிலில் இருந்து எழுகிறது, அவரது மனைவி மூலம் மறுபிறவி, மகிமை என்று வலியுறுத்துகிறது. பின்னர் அது மனிதனுக்கும் பிரம்மனுக்கும் இடையிலான உரையாடலில் (உலகளாவிய சுயம், நித்திய உண்மை) கூறுகிறது.[1] மொழிபெயர்ப்புகள்கௌசிதகி உபநிடதம் பல அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பயன்படுத்தப்படும் கையெழுத்துப் பிரதிகள் வேறுபடுவதால் மொழிபெயர்ப்புகள் வேறுபடுகின்றன. இது இடைக்காலத்தில் பாரசீக மொழியில் கோகென்க் என மொழிபெயர்க்கப்பட்டது. இருப்பினும், அந்த மொழிபெயர்ப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட கையெழுத்துப் பிரதி தொலைந்து விட்டது. எட்வர்ட் கோவல், பால் தியூசென், இராபர்ட் கியூம் மற்றும் மேக்ஸ் முல்லர் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் அதிகம் மேற்கோள் காட்டப்படுகின்றன. [1][12] இதனையும் பார்க்கவும்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia