கௌதம சிகாமணிடாக்டர் பொன். கௌவுதம சிகாமணி (Gautham Sigamani, பிறப்பு; 21 ஆகத்து 1974) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும், திமுகவின் விழுப்புரம் மாவட்டச் செயலாளரும் ஆவார். இவர் திமுக அமைச்சர் முனைவர் க.பொன்முடியின் மகனாவார்.[1] இவர் தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர். மருத்துவப் படிப்பு படித்துள்ளார். அரசியல் வாழ்க்கைகௌதம சிகாமணி 1992-ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். 2005-ஆம் ஆண்டு முதல் ஸ்டாலின் நற்பணி மன்றத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். 2019-ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] குற்ற வழக்குகள்2006 - 11 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த க. பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கூடுதலாக செம்மண் எடுத்த வகையில் ரூபாய் 28.38 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நடைபெற்று வந்தது. அமைச்சர் க. பொன்முடி, கௌதம் சிகாமணி, உறவினர்கள் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பொன்முடி, கௌதம சிகாமணி கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றவழக்கை எதிர்கொள்ள ஆணையிட்டது.[3][4][5][6][7] அமலாக்க இயக்குனரகம் சோதனை17 சூலை 2023 அன்று அமலாக்க இயக்குநரக அதிகாரிகள், அமைச்சர் க. பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் சோதனை நடத்தியது.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia