க. பத்மநாதன்
கனகசபை பத்மநாதன் (Kanagasabai Pathmanathan, 30 மே 1948 - 21 மே 2009) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். ஆரம்ப வாழ்க்கைகனகசபை பத்மநாதன் அம்பாறை மாவட்டம், காரைதீவில் இளையதம்பி கனகசபை, சின்னத்தம்பி பத்மாவதி ஆகியோருக்குப் பிறந்தவர்.[1] தனது ஆரம்பக் கல்வியை காரைதீவு இராமகிருஷ்ண ஆண்கள் பாடசாலை, கல்முனை பாத்திமா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இலங்கைக் காவல்துறையில் பணியாற்றிய பின்னர் வவுனியா கட்டிடப்ப் பொருட்கள் திணைக்களத்தில் பணியாற்றினார்.[1] அரசியலுக்கு வரும் முன்னர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.[2] அரசியலில்பத்மநாதன் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களில் ஒருவராக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 29,002 விருப்பு வாக்குகள் பெற்று ததேகூ வேட்பாளர்களில் முதலாவதாக வந்து வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] பத்மநாதன் 2009 மே 21 அன்று சிறிது கால சுகவீனமற்ற நிலையில் மதுரையில் காலமானார்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia