க. ரா. இராமசாமி
க. ரா. இராமசாமி (ஆங்கிலம்: K. R. Ramasamy) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், மற்றும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, தொடர்ச்சியாக ஐந்துமுறை [1] இந்திய தேசிய காங்கிரசு மற்றும் த.மா.கா கட்சிகளின் சார்பாக திருவாடாணை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1989, 1991, 1996, 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5][6] தொடர்ந்து 2016 ஆவது ஆண்டில் நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். சிறப்புஇவர் தமிழ்நாடு பொது கணக்குக்குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.[7][8][9] இவரது தந்தை கரியமாணிக்கம் அம்பலம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[10] வகித்த பதவிகள்சட்டமன்ற கட்சித் தலைவர்ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற இவர் காங்கிரசு கட்சியின் சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] சட்டமன்ற உறுப்பினராக
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia